அனைவரையும் ஒருங்கிணைத்துச் செல்கிறார் ஸ்டாலின்... சீதாராம் யெச்சூரி பெருமிதம்..!
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அனைவரையும் ஒருங்கிணைத்துச் செல்கிறார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாரம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரவீந்தரன் ஏற்பாடு செய்த காணொலி வாயிலான சிறப்பு கருத்தரங்கத்தில் கலந்து கொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார்.
மேலும், அரசியலில் மு.க.ஸ்டாலினுக்கு பல புதிய சவால்கள் காத்திருப்பதாகவும் அனைத்து சவால்களிலும் அவர் வெற்றிபெறுவார் என தனக்கு நம்பிக்கை உள்ளதாகவும் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். தற்போது தமிழகத்தில் தேர்தல் காலம் என்பதால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தருணம் என்றும் தேர்தல் போரில் ஸ்டாலின் நிச்சயம் வெல்வார் எனவும் யெச்சூரி தெரிவித்தார்.
ஸ்டாலின் முதலமைச்சராகும் நாள் வெகு தொலைவில் இல்லை... குலாம் நபி ஆசாத் புகழாரம்..!
மேலும், மறைந்த கருணாநிதியுடன் தனக்கிருந்த நட்பு குறித்து பேசிய யெச்சூரி, அவரது மறைவுக்கு பிறகு கட்சியை சிறப்பாக வழிநடத்தி வருவதாகவும் ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்தார். ஜனநாயகத்தை காப்பதற்காக அனைவரையும் ஸ்டாலின் ஒன்றிணைத்து செயல்பட்டு வருவதாக சீதாராம் யெச்சூரி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இனி வரும் காலம் நல்ல காலமாக அமைய வேண்டியும், ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடன் வாழ வேண்டியும் ஸ்டாலினை மீண்டும் ஒருமுறை வாழ்த்தி தனது வாழ்துரையை முடித்துக் கொள்வதாக சீதாராம் யெச்சூரி தெரிவித்திருக்கிறார்.