இலங்கை சிறையில் ஒரு தமிழக மீனவர் கூட இல்லை.. சென்னையில் பிரதமர் மோடி
சென்னை: இலங்கை சிறையில் ஒரு தமிழக மீனவர் கூட இல்லை... அனைவரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்தது மத்திய அரசு என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
சென்னையில் பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும் அடிக்கல் நாட்டியும் பிரதமர் மோடி பேசியதாவது:
தமிழக மீனவர்கள் நீண்டகாலமாக பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த பிரச்சனையின் வரலாற்றுக்குள் நான் செல்லவில்லை.
இலங்கை அரசால் மீனவர்கள் கைது செய்யப்பட்டால் அவர்களை விடுதலை செய்யும் நடவடிக்கைகளை உடனே மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. பாஜக ஆட்சி காலத்தில் 1,600 மீனவர்கள் இலங்கை சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
வரப்புயர நீர் உயரும்.. நீர் உயர நெல் உயரும்.. ஆயுதம் செய்வோம்.. ஔவை, பாரதி பாடலை பாடிய மோடி!
மேலும் 313 மீன்பிடி படகுகளும் இலங்கை அரசால் விடுவிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய மீன்பிடி படகுகளையும் இலங்கை அரசு விடுவிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது மத்திய அரசு.
தற்போதைய நிலையில் இலங்கை சிறையில் ஒரு தமிழக மீனவர் கூட இல்லை. மீனவர்களின் உரிமையை மத்திய அரசு பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.