நாளை தீவிர புயலாக மாறுகிறது ஃபனி.. சென்னையிலிருந்து இப்போ எவ்வளவு தூரத்தில் உள்ளது தெரியுமா?
Recommended Video
சென்னை: ஃபனி புயல் நாளை தீவிர புயலாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. அது ஃபனி என்ற பெயர் கொண்ட புயலாக இன்று மாற உள்ளது.
இதுகுறித்து, இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று, கூறியுள்ளதாவது:
ஃபனி புயல் எங்கே இருக்கிறது.. இன்னும் 12 மணி நேரத்தில் புயலாக மாறுகிறது.. இந்திய வானிலை மையம்
சென்னைக்கு தென் கிழக்கே
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே, 1,180 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள தீவிர காற்றழுத்த மண்டலம் இன்று மாலைக்குள் புயலாக மாறும் வாய்ப்பு உள்ளது. வலுவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், வங்கக் கடலில் தற்போது நிலை கொண்டுள்ள நிலையில், நாளை இது தீவிர புயலாக மாறும் வாய்ப்பு உள்ளது.
மீன்பிடிக்க சென்றவர்களுக்கு எச்சரிக்கை
மீனவர்கள் ஏப்ரல் 29, 30, 31 ஆகிய தேதிகளில் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம். ஏப்ரல் 30 மற்றும் மே 1ல், வட கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வட தமிழக கடலோர பகுதிகளில், ஒரு சில இடங்களில் கன மழையும், மற்ற இடங்களில் மிதமான மழையும், பெய்ய வாய்ப்பு உள்ளது.
புயல் கூண்டு
புயல் எச்சரிக்கை குறித்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையை தொடர்ந்து, தமிழக துறைமுகப் பகுதிகளில் 1ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நாகை, கடலூர், புதுச்சேரி, ராமேஸ்வரம், காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் இந்த புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
ஆழ்கடல் மீன்பிடிப்பு
மீனவர்கள் யாரும் ஆழ்கடல் மீன்பிடிக்க சென்றிருந்தால், அவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில், இன்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேரிடர் மீட்பு படையினர் தமிழகம் முழுக்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.