சென்னையில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுடச்சுட உணவு
சென்னை: மழை, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னை குடிசை பகுதிவாழ் மக்கள் 23 லட்சம் பேருக்கு நாளை தொடங்கி வரும் 13ஆம் தேதி வரை சுடச்சுட இலவச உணவு வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
Newest First Oldest First
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 36 மணி நேரத்தில் உருவாகும்.
காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம் மற்றும் புதுவை கடற்பகுதிகளை நெருங்கும்.
டிசம்பர் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக பகுதியை நோக்கி நகரும் - இந்திய வானிலை மையம்
நிவர் புயலில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு.
புயல் மற்றும் கன மழை காரணமாக இது வரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
புயலின்போது 61 மாடுகளும், 5 எருதுகளும், 65 கன்றுகளும், 114 ஆடுகளும் உயிரிழந்துள்ளன.
கால்நடைகளை இழந்தவர்களுக்கு அரசு இழப்பீடு அறிவிப்பு
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம்.
ஆரணி கமண்டல நாகநதி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம்.
நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ஆரணி கமண்டல நாகநதி ஆற்றில் பாயும் வெள்ளம்
நிவர் புயலால் கனமழை பெய்ததை அடுத்து நீர் நிலைகள் நிரம்பி வரும் நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் பாயும் கமண்டல நாக நதி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட்ட வெள்ள நீரை பார்க்க மக்கள் குவிந்தார்கள். #Flood #thiruvannamalai pic.twitter.com/IwQ3Y6qJ5F
— Oneindia Tamil (@thatsTamil) November 26, 2020
வேலூர் பாலாற்றில் இருந்து காஞ்சிபுரம் பாலாற்றிற்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு.
10000 கனஅடி நீர் வந்து கொண்டிருப்பதால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் பாலாற்று கரையோரங்களில் இருக்கும் மக்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை.
கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் எச்சரிக்கை
READ MORE
Comments
English summary
Cyclone Nivar live updates in Tamil: Heavy rain excepted for Tamilnadu including Chennai.