4 மணிநேரத்துக்கும் மேலாக கரையை கடந்து வலுவிழந்த அதிதீவிர நிவர் புயல்!
சென்னை: புதுவை- மரக்காணம் இடையே கரையை 4 மணிநேரத்துக்கும் மேலாக கடந்து வலுவிழந்த புயலானது அதிதீவிர நிவர் புயல்
Recommended Video
இன்று நண்பகலில் செய்தியாளர்களை சந்தித்தபோது பாலச்சந்திரன் கூறியதாவது: நிவர் தீவிர புயல், சென்னைக்கு தென்கிழக்கே 300 கி.மீ தொலைவிலும், புதுச்சேரிக்கு தென் கிழக்கே 250 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்துள்ளது. தற்போது காற்றின் வேகம் அதிகபட்சம் 115 கிலோ மீட்டர் வேகத்தில் உள்ளது.
ஒன்றாக சேர்ந்து வருவதுதான் சிக்கல்.. நிவர் புயல், செம்பரம்பாக்கம்.. சென்னைக்கு வானிலை வைக்கும் செக்
இன்று இரவு கரையை கடக்கும்
இன்று மதியம் அதி தீவிர புயலாக மாறி வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து புதுவை அருகே இன்று இரவு கரையை கடக்கும். இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் கடலோரம் மற்றும் சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும். நாகை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும் ஒரு சில இடங்களில் மிக கனமழையும் பெய்யும்.
அடேங்கப்பா வேகம்
புயல் கரையை கடக்கும்போது, நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், புதுவை, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 130 முதல் 140 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும். சில நேரங்களில் அதிக பட்சமாக 155 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
சென்னை காற்று வேகம்
சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 80 கிலோ மீட்டர் வேகத்திலும், சில நேரங்களில் அதிக பட்சம் 100 கிலோ மீட்டர் வேகத்திலும், காற்று வீசக்கூடும். சென்னையில், கனமழை முதல் மிக கனமழை தொடர்ந்து பெய்யக்கூடும்.
கரையை கடந்தது
கடந்த 24 மணி நேரத்தில், சென்னை விமான நிலையத்தில் 15 சென்டிமீட்டர், தரமணியில் 15 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. பெரம்பூரில் 10 சென்டி மீட்டர் மழைகடந்த 24 மணி நேரத்தில், சென்னை விமான நிலையத்தில் 15 சென்டிமீட்டர், தரமணியில் 15 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. பெரம்பூரில் 10 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார். ஆனால் மாலை 5 மணி நிலவரப்படி, புயல் அதி தீவிர புயலாக மாறிவிட்டது.
மணிக்கு 16 கி.மீ வேகத்தில் புதுச்சேரி கரையை நோக்கி நகர்ந்தது. ஒருகட்டத்தில் இதன்வேகம் திடீரென 13 கி.மீ.ஆக குறைந்தது. பின்னர் வேகம் எடுத்த நிவர் புயல் புதுவை- மரக்காணம் இடையே கரையை கடந்தது. இது அதிகாலை 3 மணிவரை கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டது.
பின்னர் அதிகாலை 2.30 மணியளவில் கரையை கடந்து வலுவிழந்து வடமேற்கு திசை நோக்கி நகர்ந்தது. நிவர் புயல் வலு குறைந்ததால் தமிழகத்துக்கு மழை வாய்ப்பும் குறைவு.
பெய்துள்ளது. இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார். ஆனால் மாலை 5 மணி நிலவரப்படி, புயல் அதி தீவிர புயலாக மாறிவிட்டது.
மணிக்கு 16 கி.மீ வேகத்தில் புதுச்சேரி கரையை நோக்கி நகர்ந்தது. ஒருகட்டத்தில் இதன்வேகம் திடீரென 13 கி.மீ.ஆக குறைந்தது. பின்னர் வேகம் எடுத்த நிவர் புயல் புதுவை- மரக்காணம் இடையே கரையை கடந்து கொண்டிருக்கிறது. இது அதிகாலை 3 மணிவரை கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டது. பின்னர் அதிகாலை 2.30 மணியளவில் கரையை கடந்து வலுவிழந்து வடமேற்கு திசை நோக்கி நகர்ந்தது. நிவர் புயல் வலு குறைந்ததால் தமிழகத்துக்கு மழை வாய்ப்பும் குறைவு.