தமிழைப்போல் ஆங்கிலத்திலும் புலமை பெற்று விளங்கிய தா.பாண்டியன்!
சென்னை: பன்முகத் திறமை கொண்ட தா.பாண்டியன் தமிழைபோல் அங்கில புலமையிலும் சிறந்து விளங்கினார்.காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பயின்று அதே கல்லூரி ஆங்கில பேராசிரியராக இருந்தார்.
இந்திராகாந்தி முதல் ராஜீவ் காந்தி வரை பல தலைவர்களின் பேச்சுக்களை மொழி பெயர்த்துள்ளார். மேலும் பல்வேறு கருத்தரங்களிலும் ஆங்கிலத்தில் திறம்பட உரையாற்றியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் இன்று உடல்நலக்குறைவு காரணமாக இறந்தார். தா.பாண்டியன் தமிழில் சிறந்த பேச்சாளர் என்பதும், தனது கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்துரைப்பவர் என்பவர் அனைவருக்கும் தெரியும். பன்முகத் திறமை கொண்ட தா.பாண்டியன் தமிழைபோல் ஆங்கில புலமையிலும் சிறந்து விளங்கினார்.
என் சிவப்பு துண்டை என்கிட்ட கொடுத்திருங்க.. செவிலியர்களிடம் கேட்டு வாங்கி தோளில் போட்ட தா பாண்டியன்
காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பயின்று அதே கல்லூரி ஆங்கில பேராசிரியராக இருந்தார். நாடளுமன்றத்தில் ஆங்கிலத்தில் சிறப்பாக உரையாற்றியுள்ளார் தா.பாண்டியன். 6 மொழிபெயர்ப்பு நூல்களை எழுதி உள்ளார். இந்திராகாந்தி முதல் ராஜீவ் காந்தி வரை பல தலைவர்களின் பேச்சுக்களை மொழி பெயர்த்துள்ளார். மேலும் பல்வேறு கருத்தரங்களிலும் ஆங்கிலத்தில் திறம்பட உரையாற்றியுள்ளார்.