சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஜோக்கர்".. திருமாவை திட்டிய காயத்ரி ரகுராம்.. மொத்தமாக குவிந்து பதிலடி கொடுத்த சிறுத்தைகள்!

திருமாவளவனை கடுமையாக சாடியுள்ளார் காயத்ரி ரகுராம்

Google Oneindia Tamil News

சென்னை: "ஜோக்கர்".. என்று ஒத்த வார்த்தையில் திருமாவை அசிங்கப்படுத்தி பாஜக ஆதரவாளர் காயத்ரி ரகுராம் ட்விட் ஒன்றினை போட.. மொத்த விசிகவினரும் ஒன்றுதிரண்டு காயத்ரிக்கு பதிலடி தந்து கேள்வி கேட்டு வருகிறார்கள்.

டெல்லியில் கலவரம் வெடித்துள்ளது.. அந்த கலவரத்தை அடக்க டெல்லி மாநில போலீசாரும் மத்திய அரசும் மிக மிக தீவிரமான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். யமுனா விஹார் உள்ளிட்ட பகுதிகளில் வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகதவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என டெல்லி போலீஸ் ஸ்பீக்கர்கள் மூலம் கலவர பகுதிகளில் அறிவித்து வருகின்றனர்.

வெங்கையா வருகை.. மத்திய போலீஸால் 20 மணி நேரம் சிறை வைக்கப்பட்ட மாணவர்கள்!வெங்கையா வருகை.. மத்திய போலீஸால் 20 மணி நேரம் சிறை வைக்கப்பட்ட மாணவர்கள்!

பதற்றம்

பதற்றம்

இதுவரை கலவரத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 22 என்று தகவல் வெளிவந்துள்ளது. அப்போது கண்டதும் சுட உத்தரவு என்பது கூடுதல் பதற்றத்தை நாட்டு மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது. ஆனால், இந்தத் தகவலை டெல்லி காவல்துறை மறுத்திருக்கிறது. இன்னொரு பக்கம், ஒரு சில அரசியல்வாதிகள் கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுவதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

விசிக

விசிக

இந்த நிலையில் கலவரம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்... அதன்படி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனமும் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், பாஜகவை சேர்ந்த கபில் மிஸ்ரா பேசிய வெறுப்புப் பேச்சுகள்தான் கலவரம் வெடிக்கக் காரணம்.

அமித்ஷா

அமித்ஷா

இந்தக் கலவரத்துக்கும் உயிரிழப்புகளுக்கும் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனடியாகப் பதவி விலக வேண்டும்.. காவல்துறை அதிகாரத்தை உள்துறை அமைச்சகத்திடமிருந்து மாற்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும்" என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். இதேபோல பல்வேறு தலைவர்கள் அமித்ஷாவை பதவி விலக வேண்டும் என்று நெருக்கடி தந்து குரல் எழுப்பி வருகின்றனர்.

காயத்ரி ரகுராம்

காயத்ரி ரகுராம்

அமித்ஷாவுக்கு கண்டனம் தெரிவித்த எல்லாரையும் விட்டுவிட்டு திருமாவை மட்டும் மீண்டும் சீண்டி உள்ளார் காயத்ரி ரகுராம்.. இவர் இப்போது கட்சியில் இருக்கிறாரா இல்லையா என்றுகூட தெரியாத நிலையில், ஒரு ட்விட் போட்டுள்ளார்.. திருமாவளவனின் அறிக்கையை சுட்டிக்காட்டிய காயத்ரி ஒரே ஒரு வார்த்தையில் "ஜோக்கர்" என்று குறிப்பிட்டுள்ளார்.. இதனால் விசிகவினர் மீண்டும் கொந்தளித்துள்ளனர்.

ஜோக்கர்

"அப்படின்னா, டெல்லி காவல்துறை அதிகாரத்தை வைத்திருந்த அமித்ஷா என்ன செய்தாரு" என்று கேள்வி கேட்டுள்ளனர்.. ஒத்த வார்த்தையை பதிவட்டு, விசிகவினரிடம் திரும்பவும் அசிங்கப்பட்டு கொண்டு வருகிறார் காயத்ரி ரகுராம்! அதேபோல, வட இந்தியர்களை பற்றி அக்கறை கொள்ளாதது திமுககூட்டணி.. இந்தியாவை இரண்டாக பிரிக்க விரும்புவதுதான் திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும்.. டெல்லிக்கு முதலை கண்ணீர் வடிக்கிறது" என்று மற்றொரு ட்வீட்டை காயத்ரி ரகுராம் போட.. அதற்குரிய வசவுகளையும் வாங்க கட்டிக் கொண்டு வருகிறார்.

English summary
caa delhi protest: dance master gayathri raghuram slams thirumavalavan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X