மாமியாருக்கு பயந்து ஸ்டவ் வெடித்தது அந்த காலம்.. இப்பெல்லாம் ஏதாச்சும் ஒன்னுன்னா உடனே கிட்னாதான்!
சொத்துக்காக மாமியாரை கடத்திய மருமகள் கைது செய்யப்பட்டார்
Recommended Video
சென்னை: மாமியாருக்கு பயந்து ஸ்டவ் வெடித்தது எல்லாம் அந்த காலம்.. ஒரு பிரச்சனை என்றால், இப்பவெல்லாம் உடனே கிட்னாதான்.. மருமகள் ஒருவர் மாமியாரை கடத்தி கொண்டு போய், அடைத்து வைத்து சித்ரவதையே செய்துள்ளார்!
சென்னை தாம்பரம் அருகே உள்ள படப்பையை சேர்ந்தவர் பத்மினி. 70 வயதான இவருக்கு, செந்தில், ராஜு என, 2 மகள்கள் உள்ளனர்.
2 மகன்களுக்கும் கல்யாணமாகி தனித்தனியே படப்பையில் வசிக்கின்றனர். ஆனால், சொத்து சம்பந்தமாக இவர்களுக்குள் அடிக்கடி தகராறு வந்துள்ளது.
2-வது மனைவியின் மகளை சீரழித்த "சின்னப்பா".. தூக்கி உள்ளே வைத்த திருவாரூர் போலீஸ்!
சரஸ்வதி
எப்ப பார்த்தாலும் மகன்கள் சொத்துக்காக மகன்கள் சண்டை போடுவதை தாங்கி கொள்ள முடியாத பத்மினி, 2 நாளைக்கு முன்பு தன்னுடைய அக்கா சரஸ்வதி வீட்டில் தங்கி இருந்தார். பத்மினிக்கும் அவரது மருமகள் மேனகாவுக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
கடத்தல்
இந்த நிலையில் நேற்று முன் தினம் சாயங்காலம் செந்தில் மனைவி மேனகா அந்த வீட்டிற்கு வந்தார்.. தன்னுடைய காரில் மாமியார் பத்மினியை ஏற்றி கடத்தி கொண்டு போய்விட்டார். அந்த காரில் ஒரு இளைஞரும் இருந்துள்ளார்.
விசாரணை
இதை பார்த்த அங்கிருந்த உறவினர்கள் உடனடியாக அயனாவரம் போலீசில் புகார் செய்யவும், போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். பத்மினியை மீட்கவும் நடவடிக்கையில் இறங்கினார். அப்போதுதான், மருமகள் மேனகா, பத்மினியை திருநின்றவூர் அருகே தனது சொந்தக்காரர் ஒருவர் வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்தது தெரிய வந்தது.
சிக்கினார்
போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர் என்று தெரிந்ததுமே பெரும்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் மாமியாரை கடத்தி அலைக்கழித்துள்ளார். கடைசியில் அயனாவரம் வீட்டுக்கே மாமியாரை கொண்டு வந்து விடும் சமயத்தில்தான், போலீசாரிடம் வசமாக சிக்கினார் மேனகா.
கைது
இதையடுத்து, மாமியாரை கடத்தி சென்ற மேனகாவையும் கைது செய்துள்ளனர். ரூ.4 கோடி சொத்தக்களை தனது பெயருக்கு மாற்றுவதற்காக மேனகா கடத்தி சென்றதும், இந்த கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் ராஜேஷ்கண்ணா என்ற இளைஞருக்கும் தொடர்பு உள்ளது என்பதும் தெரியவந்துள்ளதால் விசாரணை தொடர்கிறது. சொத்துக்காக மாமியாரை கடத்தி சித்ரவதை செய்த இந்த பாசக்கார மருமகள்தான் இப்போது சென்னையின் ஹாட் டாப்பிக் நியூஸ்!