அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பாவுக்கு 'வீரப்பன்' என்ற பெயரில் கொலை மிரட்டல்- போலீசார் விசாரணை
சென்னை: அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு வீரப்பன் என்ற பெயரில் வந்த கொலை மிரட்டல் கடிதம் குறித்து சென்னை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு மத்திய அரசுக்கு துணைவேந்தர் சூரப்பா கடிதம் அனுப்பியது பெரும் சர்ச்சையானது. தமிழக அரசின் அனுமதி இல்லாமல் சூரப்பா கடிதம் எழுதியதால் அவரை நீக்க வேண்டும் என கட்சிகள் கோரிக்கை வைத்தன.
தமிழக அரசும், மத்திய அரசின் சிறப்பு அந்தஸ்து தேவை இல்லை என பதில் அனுப்பி இருந்தது. இந்த நிலையில் துணைவேந்தர் சூரப்பாவை துப்பாக்கியால் சுட்டுக் கொல்வோம் என ஒரு மிரட்டல் கடிதம் வந்தது.
ஆந்திராவில் பள்ளிகள் திறப்பு- 829 ஆசிரியர்கள், 575 மாணவர்களுக்கு கொரோனா உறுதி
வீரப்பன் என்ற பெயரில் வந்த மிரட்டல் கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மிரட்டல் கடிதம் தொடர்பாக சென்னை கோட்டூர்புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.