சீமானுக்கு டிக் டாக் மூலம் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த 5 பேர் கைது
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு டிக் டாக் மூலம் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மேற்கு தாம்பரத்தை சேர்ந்த மணி, சுரேஷ், கிஷோர், அஜித், நிஷாந்த் ஆகியோர் டிக் டாக் மூலம் ஒரு வீடியோ வெளியிட்டனர். அதில் கத்தியை காட்டி சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது தொடர்பாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டிக் டாக் மூலம் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்ததன் பின்னணி குறித்தும் அவர்களிடம் போலீசார் துருவி துருவி விசாரிக்கின்றனர்.
தரித்திரத்தையே சுவாசித்து.. பசியையே புசித்து.. சிரிக்க வைத்த சார்லி சாப்ளின்!
Comments
English summary
Chennai Police had arrested Five Youths for issuing death threat to Naam Thamizhar Party Chief Co-ordinator Seeman.
Story first published: Wednesday, December 25, 2019, 14:06 [IST]