BREAKING NEWS LIVE: தமிழகத்தில் 3 நாட்களில் படிப்படியாக மழை குறையும்
Recommended Video
சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகைளை பார்வையிட மத்திய குழு இன்று தமிழகம் வருகிறது.
கஜா புயலால் டெல்டா மாவட்ட மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து வாடுகிறார்கள். நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவடங்கள் பேரழிவை சந்தித்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு தவிர பொது மக்களும் உதவி செய்து வருகிறார்கள்.
உடனடி நிவாரண பணிகளுக்காக தமிழக அரசு ரூ. 1,000 கோடி ஒதுக்கியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் 5 வட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
புதுச்சேரியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
நாகைப்பட்டனத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கன்னியாகுமரியில் மனோன்மணியம் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
புழல், சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மதுராந்தகம் ஏரியில் ஒரே நாளில் 13 அடி நீர் மட்டம் உயர்ந்தது
தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது
திருவள்ளூர், கடலூர், சிவகங்கை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் காலையிலிருந்து மழை பெய்கிறது
சென்னையில் வெயிலும், மேகமூட்டமுமாக இருக்கிறது
கஜா புயல் பாதிப்பு குறித்து பிரதமரிடம் முதலமைச்சர் விவரிக்க உள்ளார்
பிரதமர் மோடியிடம் கஜா புயல் நிவாரண நிதியை கோரவும் முதல்வர் முடிவு
வருவாய், நிதித்துறை தயாரித்துள்ள அறிக்கையை பிரதமரிடம் அளிப்பார்
உடனடி நிதியாக ரூ.13 ஆயிரம் கோடி கேட்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டம்
சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
மழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரியிலும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை தொடரும்
கஜா-2, கஜா-3 என்று எதுவும் கிடையாது, எல்லாம் புரளி: வானிலை ஆய்வு மையம்
புயல் பாதிப்புக்கு மத்திய அரசிடம் நிதி கேட்க டெல்லி செல்கிறார் முதல்வர் பழனிசாமி
நாளை காலை பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசுகிறார் முதல்வர் பழனிசாமி
பிரதமர் மோடியிடம் புயல் சேதம் பற்றிய இடைக்கால அறிக்கையை வழங்கவும் முதல்வர் முடிவு