சென்னை மட்டுமல்ல.. டெல்டாவையும் புரட்டிப்போட்ட மழை.. பலத்த காற்று.. கடல் கொந்தளிப்பு!
Recommended Video
சென்னை: தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று மாலையில் இருந்து அங்கு கனமழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை கடைசி கட்டத்தில் மிக தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் சென்னை மொத்தமும் வெள்ளக்காடாக மாறியுள்ளது.
சென்னையில் கடந்த 2 நாட்களாக விடாமல் மழை பெய்துள்ளது. தமிழகம் முழுக்க இன்னும் மூன்று நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் தொடர்ந்து பெய்யும் மழை.. 16 ஏரிகளுக்கும் நீர்வரத்து உயர்ந்தது.. தற்போது என்ன நிலை?
டெல்டா எப்படி
அதன்படி டெல்டா மாவட்டங்களில் நேற்று மாலையில் இருந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவில் இருந்து தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, வேதாரண்யம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு இருக்கும் குளங்கள் எல்லாம் நிரம்பி உள்ளது.
வேறு எங்கு
மேலும் சிதம்பரம், கன்னியாகுமரி, கரூர், சிவகங்கை, செங்கல்பட்டு, கடலூர், நெல்லை, அரியலூர், காஞ்சிபுரம், கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கோவையில் இன்று அதிகாலையில் இருந்து கனமழை பெய்து வருகிறது. நீலகிரியிலும் மழை பெய்து வருகிறது.
அதிகமாக மழை
அதிக அளவில் மழை பெய்து வருவதால் டெல்டாவில் பல இடங்களில் பயிர்கள் நீரில் மூழ்கி இருக்கிறது. ஜனவரி தொடக்கத்தில் அறுவடை செய்வதற்காக இருந்த பயிர்கள் எல்லாம் மிக மோசமாக நீரில் மூழ்கி பாழாகி உள்ளது.
கடல் சீற்றம்
அதேபோல் ராமநாதபுரத்தில் கடல் சீற்றமாக காணப்படுகிறது. கடலோர மாவட்டங்கள் முழுக்க பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல கூடாது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.