பண மதிப்பிழப்பு திட்டத்தை அமல்படுத்திய முறை தவறு.. ரஜினிகாந்த் பலே பல்டி!
பணமதிப்பிழப்பு நீக்கத்தை அமல்படுத்திய முறை தவறு என்று நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் பேட்டியளித்துள்ளார்.
Recommended Video
சென்னை: பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அமல்படுத்திய முறை தவறு என்று நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் பேட்டியளித்துள்ளார்.
பணமதிப்பிழப்பு நீக்கம் கொண்டு வந்து இரண்டு வருடம் முடிந்துவிட்டது. இதற்கு ஆரம்பத்தில் வரவேற்பு கொடுத்த நபர்கள் கூட இப்போது எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இதுபற்றி நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ராஜீவ் கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்றிருக்கும் தமிழர்களின் விடுதலை உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து இதில் கேள்வி கேட்கப்பட்டது. சில நிமிடங்கள் மட்டுமே பேசிய ரஜினிகாந்த் அந்த கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அதில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து எனக்கு தெரியாது. அதுகுறித்து இப்போதுதான் கேள்விப்படுகிறேன். இன்னொருமுறை அதுபற்றி கருத்து கூறுகிறேன்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையை சரியாக செயல்படுத்தவில்லை. அதை அமல்படுத்திய விதம் தவறு. அதைப்பற்றி விரிவாக பேச வேண்டியுள்ளது.
பலர் பாஜகவை ஆபத்தான கட்சி என்று நினைக்கிறார்கள். நிறைய பேர் அப்படி நினைக்கிறார்கள். பலர் அப்படி நினைத்தால், கண்டிப்பாக பாஜக அப்படிப்பட்ட கட்சியாகத்தான் இருக்கும் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.