மக்களுக்கும் நேரம்.. குடும்பத்துக்கும் முக்கியத்துவம்.. சபாஷ் செந்தில் குமார்
சென்னை: குளு..குளு..ஸ்விட்சர்லாந்துக்கு குடும்பத்துடன் போயுள்ளார் தர்மபுரி திமுக எம்.பி.செந்தில்குமார்.
மக்களவை தேர்தல் மற்றும் அதைத் தொடர்ந்து முதல் கூட்டத்தொடர் என பரபரப்பாகவே இருந்த எம்.பி.க்கள் பலரும் தங்களை சற்று ஆசுவாசப்படுத்த தொடங்கியுள்ளனர்.
கடந்த 4 மாதகாலமாக தேர்தல், மக்களவை கூட்டம், பட்ஜெட், என ஓட்டமும், நடையுமாய் இருந்த தர்மபுரி தொகுதி திமுக எம்.பி.செந்தில்குமார், குடும்பத்தினருக்கு என நேரம் ஒதுக்கி அவர்களுடன் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
லோக்சபா கூட்டம்
லோக்சபா கூட்டம் இந்த முறை அனல் பறந்தது. காரணம் பல முக்கிய மசோதாக்கள் அடுத்தடுத்து நிறைவேற்றப்பட்டன. மேலும் திமுக எம்.பிக்கள் இந்த முறை இதுவரை இல்லாத அளவுக்கு வேகம் காட்டிப் பேசியதும் ஒரு காரணம்.
கடமையை செய்த செந்தில்குமார்
அரசியல்வாதிகள், அதிலும் தற்போது பொறுப்பில் உள்ளவர்கள் குடும்பத்தினருக்கு நேரம் ஒதுக்கி அவர்களுடன் செலவிடுவது என்பது குதிரைக் கொம்பாக உள்ள இந்தக் காலத்தில், மனைவி, மகன், மகளுக்காக நேரம் செலவிட்டு கணவனுக்குரிய கடமையை, தந்தையைக் குரிய கடமையை சரிவர செய்துள்ளார் செந்தில்குமார் எம்.பி.
பயணம்
இவரது வெளிநாட்டு பயணம் குறித்து தெரிவித்த அவரது ஆதரவாளர்கள், எம்.பி.ஊரில் இல்லையென்றாலும் நாள்தோறும் மூலம் தொகுதி பிரச்சனைகளை பற்றி அறிந்து அதனை தீர்க்க எங்களுக்கு சில உத்தரவுகளை பிறப்பிப்பார் என பெருமிதப்படுகின்றனர்.
சண்டைக்கே இடமிருக்காது
செந்தில்குமார் எம்.பி.யை பின்பற்றி மற்ற அரசியல்வாதிகளும் நாட்டுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை குடும்பத்துக்கு அளித்தால் சண்டை சச்சரவுக்களுக்கே இடமிருக்காது. தனது சுற்றுப்பயணம் குறித்த புகைப்படங்களை செந்தில் குமார் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.