தினகரன் டிரஸ் ரொம்ப சேஞ்ச் ஆயிருக்கே.. பார்த்தீங்களா.. எல்லாத்துக்கும் காரணம் அனுராதாதானாம்
சென்னை: தேர்தல் பிரச்சாரத்தில் டி.டி.வி.தினகரனின் காஸ்டியூமை கவனீத்தீர்களா? காஸ்டியூம் டிசைனர் யார்? இதுதான் ஹாட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு கேள்வி.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், எப்போதும் லினன் எனப்படும் உயர்ரக மெட்டீரியலில் சட்டை தைத்து அணிவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
மற்ற தலைவர்கள் வெள்ளை வேஷ்டி, சட்டை என ஒயிட் அண்ட் ஒயிட்டில் வலம் வரும் நிலையில் ரொம்பவே கூலாக கலர் கலராக அதே சமயம் அனைவரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக சைனாகாலர் எனப்படும் வட்டக்காலர் சட்டை அணிந்து வந்தார்.
இது வரை அரைகைச்சட்டை மட்டுமே அணிந்து வந்த டி.டி.வி.தினகரன், இப்போது முழு கைச்சட்டையை அணிய தொடங்கியுள்ளார். அதுவும் சபாரி லுக்கில், அவர் புதிதாக அணியும் முழுக்கை சட்டையை பார்த்து அமமுகவினர் பரவசம் அடைகிறார்களாம்.
தமிழகத்தில் ஜாதி ரீதியான வாக்கு வங்கி பாதிப்பை ஏற்படுத்துமா? உண்மை நிலவரம் இதுதான்!
சரி தினகரனின் உடைகளை தேர்ந்தெடுப்பது யார் என்பது குறித்து விசாரித்ததில், அவரது மனைவி அனுராதா தான் என பதில் கிடைத்தது. பெங்களூரு, டெல்லி என பார்த்து பார்த்து தனது கணவருக்காக சர்ட்டிங் துணிகளை வெட்டி வந்து நேர்த்தியாக தைக்க வைக்கிறாராம்.
தனது மகளுக்கும், மனைவிக்கும் வெள்ளைச்சட்டை பிடிக்கவில்லை என்பதற்காக தான் கலர் கலராக சட்டை அணிந்து சுற்றுகிறாராம் தினகரன்.