சந்திரமுகி போல பேசுகிறார் பிரேமலதா.. அதை மறந்து கூட்டு சேர்ந்துள்ளது அதிமுக.. தினகரன் பொளேர்!
சென்னை: பிரேமலதா விஜயகாந்த் சந்திரமுக போல பேசுகிறார். அதை மறந்து விட்டு அதிமுகவினர் பேசுகின்றனர் என்று டிடிவி தினகரன் தாக்கியுள்ளார்.
தினகரன் தலைமையிலான அமமுகவின் ஆலோசனைக் கூட்டம் சென்னை அசோக் நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த தினகரன் விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவை சந்திரமுகி என்று விமர்சித்தார்.
ஆலோசனை கூட்டத்தில் பேசிய தினகரன், நமக்கு எதிரி அதிமுக மட்டுமல்ல திமுகவும்தான். அவர்களுக்கு எதிரான எதிர்ப்பை மிகக் கடுமையாக தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்.
பாமகவும் தேமுதிகவும் போட்டியிடும் தொகுதிகளில் அவர்கள் ஜெயலலிதாவுக்கு எதிராக பேசியதை நாம் எடுத்துக் கூறினாலே நம்மால் எளிதாக வெல்ல முடியும் என்று பேசிய தினகரன் 18 சட்டப்பேரவை தொகுதிகளிலும் அதே வேட்பாளர்கள்தான் போட்டியிடுகிறார்கள். நமது பலம் என்ன என்பதை மக்களிடம் நிருபிக்கவே நாம் கூட்டணி அமைக்கவில்லை.
யோசிக்காதீங்க.. நிக்க வச்சு சுடுங்க.. போட்ருங்க சார்.. நடிகை விஜயலட்சுமி ஆவேசம்!
நம்மை பார்த்துதான் அதிமுகவும் திமுகவும் பயப்படுகின்றனர் என்றெல்லாம் பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தினகரன் பிரேமலதா சந்திரமுகியை போல பேசினார். ஆனால் அதிமுகவினர் அதையெல்லாம் மறந்து விட்டனர். இப்போது அவருடனே கூட்டணி வைத்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களை எளிதாக மறைத்து விட முடியாது என்று கூறிய தினகரன் கூட்டணிக்காக இவர்கள் நாணல் போல வளைகின்றனர். மக்களுக்காக இல்லை என்று பேசிய தினகரன் தொடர்ந்து மத்திய அரசையும் தேர்தல் ஆணையத்தையும் விமர்சித்தார்.
இவர்களின் நடவடிக்கைகள் விசித்திரமாக இருக்கிறது என்றவர் 21 தொகுதிகளின் தெர்தளையுமே தள்ளி வைக்க திட்டமிட்டனர் ஆனால் தேர்தல் ஆணையத்தை மீறியே இப்போது தேர்தல் நடைபெறுகிறது. வழக்கு இருக்கிறது என்று காரணம் காட்டி 3 தொகுதிகளின் தேர்தலை தள்ளி வைத்துள்ளனர். இப்படி வழக்கு இருக்கிறது என்று காரணம் காட்டி தேர்தலை தள்ளி வைக்கிறார்கள் என்றால் நாட்டில் தேர்தலே நடைபெறாது என்றும் தினகரன் பேசினார்