என்னது திண்டுக்கல் சீனிவாசன் செல்போனை சுட்டுட்டாங்களா.. அதுல என்னெல்லாம் இருக்கோ தெரியலையே!
சென்னை ஏர்போர்ட்டில் திண்டுக்கல் சீனிவாசன் செல்போன் மாயமானதாக கூறப்படுகிறது.
சென்னை: சென்னை ஏர்போர்ட்டே பரபரப்பாக இருக்கிறது... அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் செல்போனை காணவில்லையாம்.
அடிக்கடி எதையாவது தெரியாமல் பேசி சர்ச்சையில் மாட்டி கொள்பவர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். ஆனால் சில விஷயங்களை இவர் தெரிந்தே பேசுவது மேலும் சர்ச்சையுடன் கலந்த பகீரையும் கிளப்பிவிட்டு சென்றுவிடும்.
இப்போது இவருடைய செல்போனே காணாமல் போய்விட்டது கூடுதல் பகீரை தந்துள்ளது. கடந்த 17-ந்தேதி காலை 8.10 மணிக்கு ஏர் இந்தியா விமானத்தில் திருச்சியில் இருந்து சென்னை வந்தார். பிறகு வீட்டிற்கு சென்ற பின்பே செல்போன் திருடு போய் இருப்பது அமைச்சருக்கு தெரியவந்தது. ஓடுறி விமானத்தில் யார் செல்போனை எடுத்திருப்பார்கள் என்று தெரியவில்லை.
தொலைத்து விட்டாரா?
எங்கெங்கோ அமைச்சர் தேடி பார்த்திருக்கிறார். கிடைக்கவே இல்லை. இருந்தாலும் இது சம்பந்தமாக சென்னை விமான நிலைய போலீஸ் மற்றும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் போலீசிலும் புகார் கொடுக்கப்பட்டது. சென்னை ஏர்போர்ட்டில் அன்றைய தேதியில் பதிவாகியுள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். விமான நிலைய தொழிலாளர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
மூத்த நிர்வாகிகள்
இதனிடையே அமைச்சர் தொலைத்தாரா, அல்லது எங்காவது வழக்கம்போல் மறந்து வைத்து விட்டாரா என்றும் கட்சியினர் கலாய்க்க ஆரம்பித்து விட்டனர். இப்போது விஷயம் என்னவென்றால், அமைச்சரின் செல்போன் காணாமல் போனதில் கவலையும் பீதியும் அடைந்திருப்பது மூத்த நிர்வாகிகள்தானாம். ஏனென்றால் சும்மாவே பொதுக்கூட்ட மேடையில் மைக்கை பிடித்துகொண்டு எதையாவது உளறி வைப்பார்.
ரெக்கார்டிங்
இப்போது செல்போனில் வேறு யாராவது பேசியிருந்ததையும், அதற்கு அமைச்சர் பதிலுக்கு உளறி வைத்திருப்பாரே என்று அடிவயிற்றில் அள்ளு கிளம்பி இருக்கிறது.
முடிந்தது ஜோலி
அதுமட்டுமல்ல, போனில் பேசியதை எல்லாம் ஆட்டோ ரெக்கார்டிங் செய்து வைத்திருந்தால் முடிஞ்சது ஜோலி... வரப்போகிற தேர்தலிலிருந்து ஒட்டுமொத்த அரசியலுக்கும் அது உலை வைத்துவிடும் என்று நடுங்கி போய் உள்ளார்களாம்.