அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மனைவி காலமானார்
சென்னை: தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மனைவி கண்ணாத்தாள் காலமானார். அவருக்கு வயது 67.
தமிழக வனத்துறை அமைச்சராக பதவி வகிப்பவர் திண்டுக்கல் சீனிவாசன். இவரது மனைவி கண்ணாத்தாள். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு 5 மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர்.
இந்த நிலையில், கண்ணாத்தாளுக்கு கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது. மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கண்ணாத்தாள் இன்று காலமானார்.
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மனைவி கண்ணாத்தாள் மறைவு, அதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே சோகத்தை ஏற்படுத்திஉள்ளது.
தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மத்திய அரசு விதிமுறைப்படி, இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளில், அதிகபட்சமாக 20 பேர் மட்டுமே கலந்து கொள்ள முடியும். அதுவும், ரத்த சம்மந்தம் உள்ளவர்களுக்கு மட்டுமே, பயணம் செய்ய அனுமதி வழங்கப்படும்.
எனவே, கண்ணாத்தாள் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் பங்கேற்பது சந்தேகமே.
எனவே, அரசியல் கட்சி பிரமுகர்கள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை போனில் தொடர்பு கொண்டு துக்கம் விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே, சென்னையிலிருந்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு, அவர் மனைவி இறந்த தகவல் கூறப்பட்டதும், அவர் காரில் சொந்த ஊர் புறப்பட்டுச் சென்றார்.