சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இழுபறிக்குப்பின் திருமாவுக்கு கிடைத்த வெற்றி.. இயக்குனர் ரஞ்சித் போட்ட கலங்க வைக்கும் அந்த ட்வீட்!

Google Oneindia Tamil News

சென்னை: பெரும் இழுபறிக்கு பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் திமுக கூட்டணியில் சிதம்பரம் தொகுதியில் களம் கண்டார். சக வேட்பாளரான ரவிக்குமார் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட திருமாவளவன் தில்லாக பானை சின்னத்தில் போட்டியிட்டார்.

தமிழகத்தில் பதிவான லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. ஆனால் சிதம்பரம் தொகுதியில் மட்டும் பெரும் இழுபறி நிலவியது.

ஏன்டா குடும்பத்துல 9 பேர் இருந்தும் எனக்கு 5 ஓட்டுதானா.. குமுறி குமுறி கதறிய சுயேச்சை! ஏன்டா குடும்பத்துல 9 பேர் இருந்தும் எனக்கு 5 ஓட்டுதானா.. குமுறி குமுறி கதறிய சுயேச்சை!

 பெரும் எதிர்பார்ப்பு

பெரும் எதிர்பார்ப்பு

ஒவ்வொரு சுற்று முடிவிலும் விசிக வேட்பாளரான திருமாவளவனும், அதிமுக வேட்பாளரான சந்திரசேகரும் மாறி மாறி முன்னிலை வகித்தனர். இதனால் முடிவுக்கு யாருக்கு சாதகமாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

 விடிய விடிய காத்திருப்பு

விடிய விடிய காத்திருப்பு

நள்ளிரவை தாண்டியும் சிதம்பரம் தொகுதியின் முடிவு அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் கட்சித் தொண்டர்கள் சாதகமாக முடிவு வராத என விடிய விடிய காத்திருந்தனர். அவர்களின் காத்திருப்புக்கு பலன் கிடைத்தது.

 வெற்றி பெற்றார் திருமா

வெற்றி பெற்றார் திருமா

ஆம்.. அதிகாலை 3 மணியளவில் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 2009ஆம் ஆண்டு சிதம்பரம் தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றவர் திருமாவளவன். அதைத்தொடர்ந்த தற்போதுதான் மீண்டும் நாடாளுமன்றம் செல்கிறார்.

அவ்வளவு சுலபம் இல்லை

சிதம்பரம் தொகுதியில் பெரும் இழுபறி நீடிக்க இயக்குநர் ரஞ்சித் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு ட்விட் போட்டார். அந்த ட்விட் பதிவை படிக்கும் போதே மனதில் ஏதோ இனம்புரியாத கவலை சூழ்ந்ததை உணர முடிந்தது, அந்த பதிவு, ஆம் எல்லோரையும் போல் வெற்றி தலித்துகளுக்கு அவ்வளவு சுலபம் இல்லை! அது தனித் தொகுதியாக இருந்தாலும்!! இவ்வாறு குறிப்பிட்டிருந்தார் பா.ரஞ்சித்.

பா ரஞ்சித் பாராட்டு

அவர் பதிவிட்டுள்ள மற்றொரு ட்விட்டில் திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிட்டதை பாராட்டியிருக்கிறார். மேலும் அண்ணன் திருமா வெற்றியை அளவிடவே முடியாது, அதே போல் வேர் எவர் வெற்றியுடனும் ஒப்பிடமுடியாது ! மிக சுலபமாக அலங்கரிக்கப்பட்ட சின்னத்தில் நின்று வெற்றிபெற்றிருக்க முடியும்! ஆனால் எப்போதும் நமக்கு புறக்கணிக்க முடியாத வெற்றி அவசியமாய் இருக்கிறது! என கூறியுள்ளார் ரஞ்சித்.

English summary
Director Pa. Ranjith tweets about VCK leader Thirumavalavan victory in Chidambaram parliament contituency.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X