வெள்ளை துணியில் சுற்றப்பட்ட பிறந்த குழந்தை - ட்விட்டரில் வசனம் பதிவிட்ட நடிகர் பார்த்திபன்
ரத்தமும் சதையுமாக பிறந்த குழந்தையை வெள்ளை துணியில் சுற்றி வீசி எறிந்துள்ளனர், இந்த சம்பவத்தை தனது புதிய பாதை வசனத்தை பதிவிட்டு வீடியோ வெளியிட்டுள்ளார் இயக்குநர் பார்த்திபன்.
சென்னை: ரத்தமும் சதையுமாக தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத பச்சை குழந்தை வெள்ளை துணியில் சுற்றப்பட்டு வீசி எறியப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
குழந்தைகள் வீசி எறியப்படுவதால் அநாதைகள் அதிகம் உருவாகிறார்கள் என்று வேதனையுடன் பதிவிட்டுள்ளார் இயக்குநர் நடிகர் பார்த்திபன். தனது புதிய பாதை திரைப்படத்தில் வரும் முக்கியமான வசனத்தினை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நிரோத் உபயோகியுங்கள்,
நிரோத் உபயோகியுங்கள்
நிரோத் உபயோகியுங்கள்-ன்னு ரேடியோவுல டீவியில விளம்பரப் படுத்துறாங்களே எதுக்கு?பலூன் ஊதிப் பறக்க விட்றதுக்கா?இந்த மாதிரி அனாதைகள் உருவாகாம இருக்கத்தான்!1989-புதிய பாதை வசனம்-பழசாகாம இன்னமும் பச்சக் குழந்தையாட்டம் ரத்தமும் சதையுமா கிடக்கு என்று பதிவிட்டிருக்கிறார் பார்த்திபன்.
நிரோத் உபயோகியுங்கள்,
— Radhakrishnan Parthiban (@rparthiepan) October 6, 2020
நிரோத் உபயோகியுங்கள்
நிரோத் உபயோகியுங்கள்-ன்னு ரேடியோவுல டீவியில விளம்பரப் படுத்துறாங்களே எதுக்கு?பலூன் ஊதிப் பறக்க விட்றதுக்கா?இந்த மாதிரி அனாதைகள் உருவாகாம இருக்கத்தான்!1989-புதிய பாதை வசனம்-பழசாகாம இன்னமும் பச்சக் குழந்தையாட்டம் ரத்தமும் சதையுமா கிடக்கு pic.twitter.com/NJRJXYHq6V
முறை தவறி பிறக்கும் குழந்தைகள், பெண் குழந்தைகள் பலரும் அநாதைகளாக வீசி எறியப்படுகின்றனர். அவர்களுக்காகவே தொட்டில் குழந்தை திட்டத்தை அமல்படுத்தியுள்ளது தமிழக அரசு. அதைப்பற்றி எல்லாம் கண்டு கொள்ளாமல் பிறந்த குழந்தைகளை மனசாட்சியே இல்லாமல் பலரும் வீசி எறிந்து விட்டு செல்கின்றனர்.