இயக்குநர் ஷங்கரின் தாயார் வயது மூப்பு காரணமாக காலமானர்
சென்னை: இயக்குநர் ஷங்கரின் தாயார் S.முத்துலக்ஷ்மி (88) வயது மூப்பு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட படங்களுக்குப் பெயர் போனவர் ஷங்கர். இவரது இயக்கத்தில் மெகா பட்ஜிட்டில் வெளியான அனைத்து திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளன.
இந்திய சினிமா பல புதிய தொழில்நுட்பங்களை முதல்முதலில் பயன்படுத்தியவர் இயக்குநர் ஷங்கர். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் 2.o. ரஜினி, எமி ஜாக்சன், அக்ஷய்குமார் நடிப்பில் வெளியான இந்தத் திரைப்படம் வசூலில் பல புதிய சாதனைகளைப் படைத்தது.
அதன் பின்னர், கமல் நடிப்பில் இந்தியன் 2 படப்பிடிப்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. இருப்பினும், சில பிரச்சினைகள் காரணமாக அந்தத் திரைப்படம் அப்படியே கிடப்பில் உள்ளது.
இந்நிலையில் இயக்குநர் ஷங்கரின் தாயார் முத்துலட்சுமி(வயது 88) வயது மூப்பு காரணமாகச் சென்னையில் இன்று காலமானார். இதையடுத்து திரைத்துறையைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.