மாற்றுத் திறனாளிகளுக்கான படி ரூ.2,500 ஆக அதிகரிப்பு... முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
Recommended Video
சென்னை: கூட்டுறவுத்துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான படி ரூ.1,000-ல் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக சட்டசபையில் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, தமிழ் திரையுலகில் கோலோச்சிய தியாகராஜ பாகவதருக்கு, ரூ.50 லட்சம் செலவில் திருச்சியில் திருவுருவச் சிலையுடன் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரேஷன் கடை ஊழியர்களின் குடும்ப நல நிதி ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதே போல், கூட்டுறவுத்துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான படி ரூ.1,000-ல் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அஸ்ஸாம் மொழியில் திருக்குறள் மொழி பெயர்ப்பு செய்யப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
நவம்பர் ஒன்றாம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்றும், தமிழ் பல்கலை கழகத்தில் கால்டுவெல் பெயரில் தமிழ் இருக்கை உருவாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.