நாகை மற்றும் புதுக்கோட்டையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
சென்னை: நாகப்பட்டினம் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (திங்கள்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான கஜா புயல் டெல்டா மாவட்டங்களை புரட்டி போட்டுவிட்டது. புயல் ஓய்ந்து இரு நாட்கள் ஆன நிலையிலும் அங்கு மக்கள் உணவு, குடிநீர் இல்லாமல் பெரும் துயரத்தில் உள்ளனர்.
மின்கம்பங்கள் வேரோடு சாய்ந்த நிலையில் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியுள்ளனர். பெரும்பாலான பள்ளிகள் புயலால் பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் தங்குவதற்கு பயன்படுத்தப்பட்டிருந்தது.
கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்யும் பணிகள் இன்னும் முடிவடையாததால், நாகை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட மற்றும் புதுக்கோட்டை மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments
English summary
District administration announces holiday for School and colleges in Nagapattinam and Pudukkottai tomorrow.
Story first published: Sunday, November 18, 2018, 18:08 [IST]