சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் நீடிக்கும் கனமழை.. முன்னெச்சரிக்கையாக இருங்கள்.. ஆட்சியர்களுக்கு முதல்வர் அறிவுரை!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Coast areas in Tamilnadu will get heavy rain today - Tamilnadu Weatherman

    சென்னை: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

    வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடலோர பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது.

    இதற்கு அருகாமையில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவானது. இது கொஞ்சம் கொஞ்சமாக வலுவடைந்து வருகிறது.

    கேரளா, மகாராஷ்டிராவில் கொட்டும் மழை.. மக்கள் முடக்கம்.. சில இடங்களில் வாக்குப்பதிவு பாதிப்பு!கேரளா, மகாராஷ்டிராவில் கொட்டும் மழை.. மக்கள் முடக்கம்.. சில இடங்களில் வாக்குப்பதிவு பாதிப்பு!

    என்ன மழை

    என்ன மழை

    தற்போது தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று கோவையில் மாலையில் இருந்து விடாமல் கனமழை பெய்து வருகிறது.திருப்பூர், சேலம் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகின்றது. திருவாரூர், மன்னார்குடி, தஞ்சாவூர், வேதாரண்யம், முத்துப்பேட்டை, திருச்சி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் மூன்றாவது நாளாக தொடர்ந்து மழை பெய்கிறது.

    என்ன எச்சரிக்கை

    என்ன எச்சரிக்கை

    தமிழகத்தில் கனமழை பெய்ய தொடங்கி உள்ளதால் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. மாவட்ட ஆட்சியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அணைகள், ஆறுகள், குளங்களை கண்காணிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    தென் மாவட்டம்

    தென் மாவட்டம்

    அதேபோல் தென் மாவட்டங்கள் மழையால் அதிகமாக பாதிக்க உள்ளது. கடலோர மாவட்டங்களில் அதிகமாக மழை பெய்யும். இதனால் அந்த பகுதியை சேர்ந்த ஆட்சியர்கள், பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பொதுமக்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்க நடவடிக்கை ஏற்பாடு செய்ய வேண்டும்.

    கடல்

    கடல்

    தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை கண்காணிக்க வேண்டும். வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தை கண்காணித்து தகவலை உடனுக்குடன் முதல்வருடன் பகிர வேண்டும். மீட்பு படைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    English summary
    District collectors have advised to take precaution due to heavy rain in Tamilnadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X