தமிழகத்தில் இன்று மாவட்டவாரியான கொரோனா தொற்று...2ஆம் இடத்தில் கோவை...அடுத்து சேலம்!!
சென்னை: சென்னையில் இன்று மட்டும் 1,367 கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது; 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, இன்று அதிகபட்சமாக கோவையில் 468 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, 7 பேர் உயிரிழந்துள்ளனர். மூன்றாம் இடத்தில் செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது. இங்கு 343 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
சென்னையில் கொரோனா 2வது அலை? ஒரே நாளில் 3 மடங்கு அதிகரித்த கட்டுப்பாட்டு பகுதி எண்ணிக்கை
இன்று மட்டும் சேலத்தில் 337 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து தஞ்சாவூர் மாவட்டத்தில் 251 பேர் இன்று மட்டும் பாதிக்கப்பட்டு, 2 பேர் உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தமிழகத்திலேயே பெரம்பலூர் மாவட்டத்தில்தான் இன்று குறைவாக 10 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ராமநாதபுரத்தில் 20 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தலா ஒருவரும், திருப்பத்தூரில் 4 பேரும் கொரோனாவுக்கு இன்று உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் புதிதாக 5,395 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இதுவரைக்கும் 1,72,741 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டாம் இடத்தில் செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது. இங்கு மொத்தம் 37,146 பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 34,042 பேருடன் கோவை நகரம் மூன்றாம் இடத்தில் உள்ளது. 33,298 பேர் தஞ்சாவூரில் பாதிக்கப்பட்டுள்ளனர்.