சரவெடி வெடிக்காதீங்க.. மக்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்
Recommended Video
சென்னை: தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதற்கான நேரம் என்ன என்பது குறித்த அறிவிப்பை இன்று தமிழக அரசு வெளியிட்டது.
தீபாவளி நாளில் மொத்தமே இரண்டு மணி நேரம்தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியிருந்தது.
இது குறித்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த இரண்டு மணி நேரத்தை எப்போது என்பதை தீர்மானித்துக் கொள்ளும் அதிகாரம் தமிழக அரசுக்கு வழங்குவதாக அறிவித்தது.
[நல்லா கவனிங்க.. இந்த நேரத்தில்தான் பட்டாசு வெடிக்கணும்.. "டைம் டேபிள்" வெளியிட்டது தமிழக அரசு! ]
பட்டாசு வெடிக்கும் நேரம்
இதனிடையே இன்று, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தீபாவளி நாளில் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசுகள் வெடிப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்குவதாக கூறப்பட்டுள்ளது. இது தவிர சில அறிவுரைகளையும் மக்களுக்கு தமிழக அரசு வழங்கியுள்ளது.
பாதுகாப்பு
பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவதற்கு பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டியவை என்ற தலைப்பில், பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பட்டாசுகளை வெடிக்க வேண்டும், உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன் பொதுமக்கள் திறந்தவெளியில் ஒன்றுகூடி கூட்டாக பட்டாசு வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நல சங்கங்கள் மூலம் முயற்சிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
தவிர்க்க வேண்டும்
தவிர்க்க வேண்டியவை என்ற தலைப்பில், அதிக ஒலி எழுப்பும், தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளை தவிர்க்கலாம், மருத்துவமனைகள் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
வாழ்த்து
மக்கள் அனைவரும் விபத்தில்லா மற்றும் மாசில்லா தீபாவளியை சிறப்பாக கொண்டாடுவோம். அனைவருக்கும் இதயம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள். இவ்வாறு அரசின் அறிக்கை தெரிவிக்கிறது.