தமிழகத்தில் இருந்து மன்மோகன்சிங்குக்கு ராஜ்யசபா சீட்... ஓகே சொன்னது திமுக!
Recommended Video
சென்னை; தமிழகத்தில் இருந்து முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கை ராஜ்யசபா எம்.பி.யாக்க திமுக ஒப்புக் கொண்டதால் காங்கிரஸ் மகிழ்ச்சியில் உள்ளதாம்.
1991-ம் ஆண்டு முதல் ராஜ்யசபா எம்.பி.யாக இருந்து வந்தார் மன்மோகன்சிங். அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக அவர் தேர்வு செய்யப்பட்டு வந்தார்.
அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை பாஜக கபளீகரம் செய்து கொண்டது. இதனால் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. மன்மோகன்சிங்கின் ராஜ்யசபா எம்.பி. பதவி காலம் ஜூன் 15-ந் தேதியுடன் முடிவடைந்தது.
நான் கிராமத்து பொண்ணு.. ஊக்க மருந்து பயன்படுத்தவே இல்லை.. அடிச்சு சொல்றேன்.. கோமதி மாரியப்பன்
மன்மோகன்சிங்குக்கு சீட்
சுமார் 28 ஆண்டுகாலம் நாடாளுமன்ற பணியாற்றி வந்த மன்மோகன்சிங்கை தொடர்ந்து ராஜ்யசபாவுக்கு அனுப்புவதில் காங்கிரஸ் தீவிரமாக இருக்கிறது. அதனால்தான் லோக்சபா தேர்தல் கூட்டணியின் போதே காங்கிரஸுக்கு ஒரு ராஜ்யசபா சீட் என பேரம் பேசியதாக தகவல்கள் வெளியாகின.
வைகோவுக்கு வாய்ப்பு
மதிமுக பொதுச்செயலர் வைகோவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் என திமுகவே அறிவித்திருக்கிறது. எஞ்சிய 2 இடங்களுக்கு திமுகவில் கடும் போட்டி நிலவியது.
ஓகே சொன்ன திமுக
இந்நிலையில் மன்மோகன்சிங்குக்காக மீண்டும் திமுகவுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் மன்மோகன்சிங்கை ராஜ்யசபா எம்.பி.யாக்க திமுக ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ் மேலிடம் மகிழ்ச்சியில் உள்ளதாம்.
திமுகவில் கடும் போட்டி
தற்போதைய நிலையில் திமுகவுக்கு ஒரே ஒரு ராஜ்யசா இடம்தான் இருக்கிறது. இதை கைப்பற்றுவதற்கான லாபிகள் திமுகவில் படு உக்கிரமாக நடைபெற்று வருகின்றன.