திமுக 'செல்வத்துக்கு' தேவை பணபலம்.. தராவிட்டால் மீண்டும் அதிமுக 'மரகதம்'.. இதுதான் காஞ்சி நிலவரம்!
காஞ்சிபுரத்தில் அதிமுக-திமுக இடையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: "செல்வத்துக்கிட்ட பணம் இல்லை.. ஆனால் செல்வாக்கு இருக்கு.. அதனால அவருக்கு கண்டிப்பா வெற்றி கிடைக்கும்" என்று சொல்கிறார்கள் காஞ்சிபுரம் தொகுதி திமுக வேட்பாளர்.
காஞ்சிபுரம் ஒரு தனி தொகுதி ஆகும். அதிமுக சார்பாக மரகதம் குமரவேல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போதைய எம்பியும்கூட.
இவருக்கு தொகுதியில் தொண்டர்கள் பலமும் உள்ளது. பண பலமும் உள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக கூட்டணி பலமும் இருக்கிறது. கடந்த தேர்தலில் ஜெயலலிதாவின் பார்வையில் இவர் நேரடியாக பட்டதுதான் இவரது வெற்றியின் அடித்தளமே. 2014 தேர்தல் பிரசாரத்தை காஞ்சியில் இருந்துதான் ஜெயலலிதாவே தொடங்கினார். இறுதியில் மரகதம் வெற்றியும் பெற்றார்.
2 வாரத்தில் மட்டும் சிக்கியது ரூ.116 கோடிப்பு... தேர்தல் பறக்கும் படையினர் சுறுசுறு
பின்னடைவு
ஆனாலும் இவர் மீது சில புகார்கள் குறிப்பாக அவரது குடும்பம் சார்ந்து சில தனிப்பட்ட முறையில் சர்ச்சைகள் எழுந்து வருவது மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறதாம். அதுவும் இல்லாமல், தொகுதியில் கட்சியினருடன் இணக்கமாக இல்லை என்ற புகாரும் உள்ளது. ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், தாலுகா அலுவலகம் அருகே ‘தொங்கு மேம்பாலம்' அமைக்கும் கோரிக்கை நீண்ட நாளாக தொங்கலில் உள்ளது. இதனால், மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இதெல்லாம் சேர்த்து பார்த்தால் இவருக்கு வாய்ப்பு குறைவு என்ற மாயை ஏற்பட்டுள்ளது.
நெருங்கி பழகுவார்
அதே சமயம் திமுக சார்பில் சி. செல்வம் என்பவர் நிறுத்தப்பட்டுள்ளார். விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். எம்.காம், எம்.பில், எல்.எல்.பி படித்தவர். இவர் கடந்த முறை இதே தொகுதியில் போட்டியிட்டு தோற்று போனவர்தானாம். இருந்தாலும் இந்த முறையும் இவரையே வேட்பாளராக அறிவித்துள்ளது கட்சி. இதற்கு காரணம், மக்களிடம் நெருங்கி பழகும் குணம்தானாம்!
கட்சியின் உதவி
செல்வத்திடம் பணம் இல்லாவிட்டாலும், மக்கள் செல்வாக்கை அதிகமாகவே பெற்றிருக்கிறாராம். எனினும் இவருக்கு கட்சி தலைமை கட்டாயம் பண உதவி செய்தே ஆக வேண்டும் என்றும் அப்படி செய்தால்தான் வெற்றி பெறுவது சாத்தியம் என்றும் திமுக தொண்டர்கள் மனம்விட்டு சொல்கிறார்கள். மேலும் மரகதம் குமரவேல் மேல் உள்ள எதிர்ப்பு வாக்குகளும், சிறுபான்மை ஓட்டுக்களும் செல்வத்துக்கு சாதகமாக விழ வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.
காஞ்சி தரிசனம்
அதனால் காஞ்சிபுரம் தொகுதியில் வெற்றி பெற போவது யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்கனவே எழுந்துவிட்டது. பணபலம், அதிகார பலம் உடைய மரகதம் குமரவேல் அல்லது மக்கள் செல்வாக்கு செல்வாக்கு பெற்ற செல்வம்.. இவர்களில் யாருக்கு கிடைக்க போகிறது காஞ்சி தரிசனம்! பொறுத்திருந்து பார்ப்போம்!