4 தொகுதி இடைத் தேர்தல்.. திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு.. 2 மாஜி அமைச்சர்களுக்கு சீட்!
Recommended Video
சென்னை: 4 தொகுதி சட்டசபை இடைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர்களை கட்சி மேலிடம் அறிவித்துள்ளது.
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய நான்கு சட்டசபைத் தொகுதிகளுக்கு மே 19ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நான்கு தொகுதிகளிலும் திமுகவே போட்டியிடும் என அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி இன்று வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்தது.
வேட்பாளர்கள் விவரம்:
திருப்பரங்குன்றம் - டாக்டர் சரவணன்
அரவக்குறிச்சி - செந்தில் பாலாஜி
சூலூர் - பொங்கலூர் பழனிச்சாமி
ஒட்டப்பிடாரம் - எம்.சி. சண்முகையா
இவர்களில் செந்தில் பாலாஜி மற்றும் பழனிச்சாமி ஆகிய இருவரும் முன்னாள் அமைச்சர்கள் ஆவர். செந்தில் பாலாஜி அதிமுகவில் அமைச்சராக இருந்தார். சசிகலா குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர். தினகரனுடன் இணைந்து அமமுகவில் செயல்பட்டவர். சமீபத்தில்தான் விலகி வந்து திமுகவில் இணைந்தார். தற்போது அவருக்கு அவர் ஏற்கனவே போட்டியிட்டு வென்ற அரவக்குறிச்சி தொகுதியையே திமுக கொடுத்துள்ளது.
கொய்யால.. ரெண்டு பேரும் சேர்ந்து பித்தலாட்டமா பண்றீங்க.. வச்சு செஞ்ச நெட்டிசன்கள்
பொங்கலூர் பழனிச்சாமியின் மகன் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் சீட் தரப்படவில்லை. பொங்கலூர் பழனிச்சாமியும் தீவிரமான அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கியே இருந்து வந்தார். இந்த நிலையில் அவரை தற்போது சூலூர் தொகுதியில் வேட்பாளராக்கியுள்ளார் ஸ்டாலின்.
திருப்பரங்குன்றம் தொகுதி இடைத் தேர்தலில் போஸை எதிர்த்துப் போட்டியிட்டவர் டாக்டர் சரவணன். ஆனால் தோல்வியடைந்தார். போஸ் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடர்ந்து சமீபத்தில்தான் வெற்றியும் பெற்றார். போஸ் மறைந்ததைத் தொடர்ந்து தற்போது அங்கு இடைத் தேர்தல் வந்துள்ளது, சரவணனே மீண்டும் போட்டியிடுகிறார்.