சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கருணாநிதி தொகுதி.. எதிர்பார்ப்பை உருவாக்கும் திருவாரூர் இடைத்தேர்தல்.. திமுக வேட்பாளர் இவர்தான்

18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுகவின் திருவாரூர் தொகுதி வேட்பாளராக பூண்டி கலைவாணன் அறிவிக்கப்பட்டு உள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    சட்டசபை இடைத் தேர்தல் வேட்பாளர்களையும் அறிவித்தார் மு.க.ஸ்டாலின்

    சென்னை: 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுகவின் திருவாரூர் தொகுதி வேட்பாளராக பூண்டி கலைவாணன் அறிவிக்கப்பட்டு உள்ளார்.

    தமிழகத்தில் 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. காலியாக உள்ள 21 தொகுதிகளில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது.

    இதற்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் 20 லோக்சபா தொகுதிகளில் திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    திமுக வேட்பாளர்களில் வக்கீல்களின் ஆதிக்கம்.. டாக்டர்களுக்கும் என்ஜீனியர்களுக்கும் பஞ்சமில்லை! திமுக வேட்பாளர்களில் வக்கீல்களின் ஆதிக்கம்.. டாக்டர்களுக்கும் என்ஜீனியர்களுக்கும் பஞ்சமில்லை!

    வேட்பாளர்

    வேட்பாளர்

    திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன்தான் திருவாரூர் திமுக வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். திமுகவிற்காக 12 வருடங்களுக்கும் மேலாக தீவிரமாக உழைத்துவரும் நபர் என்பது குறிப்பிடத்தக்கது. 2007ல் இவர் திருவாரூர் திமுக மாவட்ட செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அப்போதில் இருந்தே அவர் திருவாரூர் திமுக மாவட்ட செயலாளராக இருக்கிறார்.

    விருப்பம்

    விருப்பம்

    உள்ளூர் அரசியல் தெரிந்த இவர் தேர்தலில் நிற்பதுதான் சரியாக இருக்கும் திமுக தொண்டர்கள் பேசி வருகிறார்கள். விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர் திருவாரூரில்தான் தற்போது வசித்து வருகிறார். திமுக மாவட்டச் செயலாளராக இருந்த பூண்டி கலைவாணனின் சகோதரர். . கடந்த 2007ம் வருடம் அரசியல் பகை காரணமாக பூண்டி கலைச்செல்வன் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மிக முக்கியம்

    மிக முக்கியம்

    திருவாரூரில் திமுகவை மிகவும் வலுவான கட்சியான மாற்றியதில் பூண்டி கலைச்செல்வன் மற்றும் பூண்டி கலைவாணனுக்கு பெரிய பங்கு உள்ளது. மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி திருவாரூர் தொகுதியில் நிற்க வேண்டும் என்பதற்காக அந்த தொகுதியை இரண்டு முறை விட்டுக் கொடுத்துள்ளார் பூண்டி கலைச்செல்வன்.

    நெருக்கமான நபர்

    நெருக்கமான நபர்

    இவர் கருணாநிதி குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானார். கருணாநிதி அந்த தொகுதியில் வரலாறு காணாத வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறவும் பூண்டி கலைவாணன் ஒருவகையில் காரணம்தான். இவரின் தீவிர உழைப்பிற்கு பரிசாக திமுக சார்பாக போட்டியிடும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கருணாநிதி தொகுதியில் இவர் போட்டியிடுவதால் பூண்டி கலைவாணன் அதிக முக்கியத்துவம் பெறுகிறார்.

    English summary
    Thiruvarur by-election 2019: DMK announces Poondi Kalaivanan as their candidate for the election.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X