சென்னையில் குவிந்த திமுக தொண்டர்கள்.. கருணாநிதி சிலையை காண கடலென வருகை!
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலையை காண திமுக தொண்டர்கள் பலர் சென்னை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.
Recommended Video
சென்னை: திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலையை காண திமுக தொண்டர்கள் பலர் சென்னை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் அண்ணா மற்றும் மறைத்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை இன்று திறக்கப்பட உள்ளது. மேலும் மிக பிரமாண்டமான தி.மு.க. கொடி கம்பம் ஒன்றும் அங்கு நிறுவப்பட உள்ளது.
இதை தொடர்ந்து விழாவிற்கு வந்திருக்கும் தலைவர்கள் கலந்து கொள்ளும் விழா இன்று மாலை 5 மணிக்கு ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடக்கிறது. அங்கு இப்போதே தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
இந்த சிலை முழுக்க முழுக்க வெண்கலத்தால் செய்யப்பட்டது. இதை மிகவும் தத்ரூபமாக வடிவமைத்து இருக்கிறார்கள். இந்த சிலையை வடிவமைக்க இரண்டு வாரம் ஆனதாக கூறப்படுகிறது. இது சிலையை காண ஆயிரக்கணக்கான தொண்டர்கள் காண சென்னை வந்துள்ளனர்.
தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து இந்த சிலையை காண ஆயிரக்கணக்கானோர் சென்னை வந்துள்ளனர். காலையில் இருந்து பேருந்து மட்டும் ரயில் மூலம் பலர் சென்னையில் குவிந்து இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மாலை நடக்கும் விழாவிலும் கலந்து கொள்வார்கள்.