ஒரு கூடை சன்லைட்.. ஒரு கூடை மூன்லைட்.. போதும்டா விடுடா.. தமிழச்சியை பூக்களால் மகிழ்வித்த சிறுவன்!
தென் சென்னை தொகுதியில் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
Recommended Video
சென்னை: ஒரு கூடை சன்லைட்.. ஒரு கூடை மூன்லைட்.. ஒன்றாக சேர்ந்தால்.. என்பது மாதிரி ஒருகூடை பூக்களை.. தமிழச்சி தங்கபாண்டியன் மீது அள்ளி அள்ளி வீசி மகிழ்ந்தான் ஒரு சிறுவன்!
தென்சென்னையில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிடுகிறார். இதற்காக தினமும் தொகுதியில் வளைத்து வளைத்து பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்.
செல்லும் இடமெல்லாம் தமிழச்சிக்கு தொகுதி மக்கள் வரவேற்பு அளிக்கவே செய்கிறார்கள். ஒருசிலர் தமிழச்சியை பார்த்ததும் தங்களது குறைகளை உரிமையாக எடுத்து சொல்லி தீர்க்குமாறு கேட்டு கொள்கிறார்கள்.
ஒப்புதல்
அப்படித்தான் ஒரு பகுதிக்குள் ஓட்டு கேட்க பிரச்சார வேனில் செல்கிறார் தமிழச்சி. வேன் ஒரு இடத்தில் நிற்கிறது. அந்த பகுதி மக்கள் தமிழச்சி வந்திருப்பதை அறிந்ததும், வீட்டிலிருந்து வெளியே வருகிறார்கள். அவர்களிடம் தமிழச்சி வாக்கு கேட்க, அதற்கு பொதுமக்களுக்கும் சரியென்று ஒப்புதல் தந்து கொண்டிருந்தார்கள்.
முற்றத்துல ரோஜா பூ... தூணில் மல்லிகை பூ.. ஆகாயத்தில் நட்சத்திரம்... கீழ நம்ம மூச்சு காத்து!
ஓட்டு வீடு
அந்த சமயத்தில் தமிழச்சிக்கு நேர் எதிரே ஒரு ஓட்டு வீடு இருக்கிறது. அந்த ஓட்டின் மேல் ஒரு சிறுவன் உட்கார்ந்திருக்கிறான். கையில் ஒரு கூடை நிறைய பூ இருக்கிறது. மற்றொரு கையில் செல்போன் வைத்திருக்கிறான்.
சிறுவன்
கூடையில் இருந்த பூக்களை அள்ளி அள்ளி தமிழச்சி மீது வீச ஆரம்பித்துவிட்டான். இதை பார்த்ததும் தமிழச்சிக்கு குஷி தாங்கல. வேண்டாம், பூ போடாதே என்று சைகை காட்டினாலும், அந்த சிறுவன் எதையுமே சட்டை செய்யவில்லை.
ரொம்ப கோபம்.. காங்கிரசின் முடிவால் கடுப்பான குஷ்பு.. இதுதான் காரணம்- வீடியோ
பொறுப்பு
வந்திருக்கும் வேட்பாளர் யார், எந்த கட்சி, என்றெல்லாம் அச்சிறுவனுக்கு தெரிய வாய்ப்பிருக்காது. அந்த பகுதியில் பிரச்சாரத்திற்கு ஏற்பாடு செய்தவர்கள் இந்த பையனிடம் பூ அள்ளி வீசும் பொறுப்பை தந்திருப்பார்கள் போல தெரிகிறது. தமிழச்சி அங்கிருந்து நகரும் வரை, நிறுத்தாமல் பூக்களை வீசிக் கொண்டே இருந்தான். மற்றொரு கையில் தன் செல்போனால் தமிழச்சியை வீடியோ எடுத்து கொண்டிருந்தான்.
கடைசியாக, தமிழச்சி கிளம்பி செல்லும்போது, "பாத்து, பத்திரமா கீழே இறங்கி வா" என்று செல்லமாக சொல்லிவிட்டு நகர்ந்தார்!