சட்டசபை தேர்தல்: திமுகவில் விருப்ப மனு கொடுத்தவர்களிடம் நேர்காணல் தொடங்கியது
சென்னை: தமிழகம், புதுவை சட்டசபை தேர்தல்களில் போட்டியிட திமுகவில் விருப்ப மனு கொடுத்தவர்களிடம் இன்று நேர்காணல் தொடங்கியது.
Recommended Video
சட்டசபை தேர்தலில் திமுக தலைமையில் மெகா கூட்டணி உறுதியாகி உள்ளது. காங்கிரஸ், மதிமுக, விசிக, இடதுசாரிகள், முஸ்லிம் லீக், மமக, தவாக உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.
இதில் முஸ்லிம் லீக், மமகவுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதர கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை விருப்ப மனு கொடுத்தவர்களிடம் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நேர்காணலை தொடங்கினார். இன்று காலை முதலில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம் தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களிடம் நேர்காணல் தொடங்கியது.
யார் அந்த "3 பேர்".. அமித்ஷா உள்ளிட்டோருடன்.. அடிக்கடி ரகசியமாக சந்திக்கும் எம்பிக்கள்.. பரபர டெல்லி
இதனைத் தொடர்ந்து மாலையில் விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் போட்டியிட விரும்பியோரிடம் நேர்காணல் நடைபெறும். இந்த நேர்காணல் நடைபெறுவதால் அண்ணா அறிவாலயத்தில் கூட்டம் நிரம்பியுள்ளது.