யாருக்கு எந்த தொகுதி.. துரைமுருகனுடன் மு.க.ஸ்டாலின் தீவிர ஆலோசனை
அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின், துரைமுருகன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை: கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கவுள்ள தொகுதிகள் குறித்து அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
2 தினங்களுக்கு முன்பு திமுக கூட்டணி கட்சிகளுக்கான பேச்சுவார்த்தை இனிதே முடிந்தது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சி தலைவர் முக ஸ்டாலின், காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளும் பிற கட்சிகளுக்குப் பத்து தொகுதிகளுமாக கூட்டணி கட்சிகளுக்கு 20 சீட்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் மீதமுள்ள 20 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடுமென்றும் அறிவித்தார்.
மேலும் மார்ச் 7ஆம் தேதிக்குப் பிறகு, அதாவது இன்றைய தினம், கூட்டணி கட்சிகள் எந்தெந்த இடங்களில் போட்டியிடும் என்பது குறித்து இதற்கென அமைக்கப்பட்ட பொருளாளர் துரைமுருகன் தலைமையிலான குழுவினருடன் சம்பந்தப்பட்ட கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி இடங்களை முடிவு செய்வார்கள் எனவும் தெரிவித்திருந்தார்.
திமுக அதிமுகவுடன் பேச்சு.. ரத்தத்தை விற்க முயற்சிக்காதீர்கள்.. தேமுதிக நிர்வாகி ஆவேசம்-விலகல்
அதன்படி, இன்று கட்சியின் ஆலோசனை நடைபெற்றது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்கலாம் என்பது குறித்து மிகத் தீவிரமாக தலைவர்கள் ஆலோசித்ததாக சொல்லப்படுகிறது.