ஜூன் 3ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் கூட்டம்!
சென்னை: ஜூன் 3ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தல் மற்றும் 22 தொகுதிகளுக்கான சட்டசடை தேர்தலில் திமுக பெரும்பாலான இடங்களை கைப்பற்றியது. 22 தொகுதிகளுக்கு நடைபெற்ற சட்டசபை இடைத்தேர்தலில் திமுக 13 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
அதேபோல் 38 லோக்சபா தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 37 இடங்களை திமுக கைப்பற்றியது. திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பிறகு திமுக பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.
வரும் ஜூன் 3ஆம் தேதி மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில்
ஜூன் 3ம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏ-க்கள், எம்,பி-க்கள் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக தலைமை கழகத்தில் இருந்து பேராசிரியர் அன்பழகன் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாடாளுமனற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டம் வருகிற ஜூன் 3ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்டக் கழகச் செயலாளர்கள், சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற தொகுதிக் கழகப் பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 3ம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் ஜூன் 3ம் தேதி என்பதால் அன்றைய நாள் கட்சியின் திட்டம், மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து முடிவு செய்யப்படலாம் என தெரிகிறது.