கூடுகிறது திமுக உயர் நிலை கூட்டம்.. இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் அறிவிக்கப்படுமா?
Recommended Video
சென்னை: திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம் வரும் 16-ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.
திமுக உயர்நிலை செயல்திட்டகுழுவில் 24 உறுப்பினர்கள் உள்ளனர். துரைமுருகன், சுப்புலட்சுமி ஜெகதீசன், வெள்ளக்கோவில் சாமிநாதன், உள்ளிட்டோர்களை உறுப்பினர்களாக கொண்ட அந்தக் குழு திமுகவில் முக்கிய அங்கம் வகிக்கிறது. கட்சியில் அடுத்தக்கட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், ஆலோசனைகள் உள்ளிட்ட முக்கிய முடிவுகள் இந்தக் கூட்டத்தில் தான் எடுக்கப்படும்.
இந்நிலையில் அந்தக் கூட்டத்தை கூட்டியுள்ளார் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் செப்.16-ம் தேதி மாலை 5 மணிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.
நாளை திருவண்ணாமலையில் திமுக முப்பெரும் விழா நடைபெறும் சூழலில், நாளை மறுதினமே அவசரமாக இந்தக் குழு கூடுகிறதென்றால் ஏதெனும் முக்கியமான முடிவுகள் எடுக்க வாய்ப்பு உள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எப்படியாவது இந்தியைத் திணிக்க.. இப்படித் துடிக்கிறதே மத்திய அரசு.. ஸ்டாலின் ஆவேசம்
மேலும், பொதுக்குழுவை கூட்டுவது, உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது, காங்கிரசுடனான கூட்டணியை தொடர்வது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து உயர்நிலை செயல்திட்டக் குழுவில் விரிவாக ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது. மேலும், அண்ணா, கருணாநிதி காலத்தில் நடைபெற்ற மொழிப்போராட்டங்களை போல், இப்போது மொழிப்போராட்டத்தை முன்னெடுப்பது பற்றியும் விவாதிக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.