சர்வாதிகாரியாக மாறுவேன்.. திருத்திக் கொள்ளுங்கள்.. திமுக பொதுக்குழுவில் ஸ்டாலின் கொந்தளிப்பு!
சர்வாதிகாரியாக மாறுவேன், நிர்வாகிகள் தங்களை திருத்திக் கொள்ள வேண்டும் என்று திமுக பொதுக்குழுவில் திமுக தலைவர் ஸ்டாலின் கொந்தளித்துள்ளார்.
சென்னை: சர்வாதிகாரியாக மாறுவேன், நிர்வாகிகள் தங்களை திருத்திக் கொள்ள வேண்டும் என்று திமுக பொதுக்குழுவில் திமுக தலைவர் ஸ்டாலின் கொந்தளித்துள்ளார்.
தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் இன்று சென்னையில் நடந்தது. திமுகவின் மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், சில எம்பிக்கள் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து இதில் ஆலோசித்தனர். உள்ளாட்சி தேர்தல் குறித்து இதில் முக்கிய விவாதங்கள் செய்யப்பட்டது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் மிகவும் கோபமாக நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஸ்டாலின்
திமுக பொதுக்குழுவில் ஸ்டாலின் பேசியதாவது, கட்சியின் வளர்ச்சிக்காக சர்வாதிகாரியாக மாறுவேன். தனிப்பட்டு எனக்காக அல்ல, கட்சி வளர்ச்சிக்காக. தங்களை திருத்தி கொள்ளாத திமுக நிர்வாகிகள், திருத்தப்படுவார்கள்.
தேர்தல் நேரம்
தேர்தல் நேரத்தில் மட்டும் நாம் கடுமையாக உழைக்கிறோம். தேர்தல் நேரத்தில் மட்டும் உழைத்தால் போதாது. நிர்வாகிகள் எப்போதும் உழைப்பதற்கு தயாராக இருக்க வேண்டும். என்னுடைய சக்தியையும் தாண்டி நான் உழைத்து வருகிறேன்.
வெற்றி கிடைக்காது
வெற்றி சாதாரணமாக கிடைக்காது, கிடைக்கவும் விடமாட்டார்கள். யாரும் நம்மை கட்டுப்படுத்த முடியாது என்று திமுக நிர்வாகிகள் கருத கூடாது.
விமர்சனம் எப்படி
விமர்சனங்களை சம்மந்தப்பட்ட நிர்வாகிகள் கேட்டு திருத்திக் கொள்ள வேண்டும். சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, முழுமையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால்தான் லோக்சபா தேர்தலில் நாம் வெற்றிபெற்றோம். அது மீண்டும் நடக்கும்.
சர்வாதிகாரியாக மாறுவேன்
நான் சர்வாதிகாரியாக மாறுவேன் என்று பேச்சுக்காக சொல்லவில்லை. ஒருநாள் கண்டிப்பாக இது நடக்கும் கட்சியின் பல நிர்வாகிகளை அழைத்து பேசிய பின்தான் இப்படி முடிவு செய்துள்ளேன். கட்சியில் எல்லோரிடமும் பேசியபின்தான் இப்படி கூறுகிறேன், என்று திமுக தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.