வெட்கக்கேடு.. குடிநீர் பற்றாக்குறைக்கு காரணம் திமுக தான்.. ஹெச். ராஜா ஆவேசம்
Recommended Video
சென்னை: குடிநீர் பற்றாக்குறைக்கு காரணம் திமுக தான். மீண்டும் மீண்டும் நான் கூறுகிறேன் என்று பாஜக தேசியச் செயலாளர் ஹெச். ராஜா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், குடிநீர் பற்றாக்குறைக்கு காரணம் நான் மீண்டும் மீண்டும் கூறுகிறேன் திமுக 67ல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து கொடுத்துள்ள பொறுப்பற்ற ஆட்சியே காரணம். சென்னை மற்றுமல்ல தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் அழிப்பு. மதுரையில் உயர்நீதிமன்ற கிளை நீர்நிலையின் மீது. வெட்கக்கேடு. என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், காளை மற்றும் எருது காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் சேர்த்தது, நெடுவாசல், மீத்தேன், நீட், கர்நாடகா காவிரியில் தமிழகத்தை கேட்காமல் அணைகள் கட்டியது, கச்சத்தீவை தாரை வார்த்தது இவை அனைத்தும் திமுக காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இன்று கோரிக்கை, போராட்ட வேஷமா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
குடிநீர் பற்றாக்குறைக்கு காரணம் நான் மீண்டும் மீண்டும் கூறுகிறேன் திமுக 67ல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து கொடுத்துள்ள பொறுப்பற்ற ஆட்சியே காரணம். சென்னை மற்றுமல்ல தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் அழிப்பு. மதுரையில் உயர்நீதிமன்ற கிளை நீர்நிலையின் மீது. வெட்கக்கேடு.@PTTVOnlineNews
— H Raja (@HRajaBJP) July 2, 2019
முன்னதாக, குற்றம் சொல்றதை விட குற்றத்தை நிரூபிக்கணும். முடியவில்லை என்றால், மத்திய அரசாக இருக்கும் நீங்கள் நீர் நிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அதுவும் முடியவில்லை என்றால் நீங்கள் நம்பும் யாகத்தின் மூலமாக கூட குற்றவாளிகளை தண்டிக்க வழியை பாக்கணும் என்று குறிப்பிட்டு ஹெச். ராஜாவுக்கு கேள்வி எழுப்பியிருந்தார் ஒருவர்.
அடடா.. வைகோவுக்கு இப்படி ஒரு சிக்கல் இருக்கா.. அதையும் தாண்டி வரவேண்டும்.. பெரும் எதிர்பார்ப்பு
அதற்கு பதிலளித்த ஹெச். ராஜா, 1970ல் Long Tankல் வள்ளுவர் கோட்டம், 1973ல் வியாசர்பாடி ஏரியில் அம்பேத்கர் கல்லூரி, பிவி கல்லூரி, 1970ல் காட்டேரி ஏரியில் TNSTC&TNEB, கொடுங்கையூர் ஏரியில் அரசு வீட்டு வசதி வாரிய முத்தமிழ் நகர், வில்லிவாக்கம் அருகில் கொன்னூர் ஏரியில் SIDCO இவை அனைத்தும் நீங்களே நேரில் பார்க்கலாம் என்று பதிலளித்துள்ளார்.