ஐபிஎஸ்2020: மஞ்சள் அணியினர் களமிறங்கும் நேரம் வந்துவிட்டது.. வீட்டிலிருந்தே விசில் போட்ட ஸ்டாலின்!
சென்னை: திமுக தலைவர் முக ஸ்டாலின் ஐபிஎல் போட்டிகள் தொடங்கியுள்ளதை முன்னிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த ஐபிஎல் போட்டிகள் இன்று அபுதாபியில் கலக்கலாய் தொடங்கியிருக்கிறது.
முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்நிலையில் தமிழக எதிர்க்கட்சி தலைவரும் திமுக தலைவருமனா ஸ்டாலின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் ரசிகரான ஸ்டாலின் டிவிட்டர் பக்கத்தில் தனது வாழ்த்தை பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக பதிவிட்டிருப்பதாவது, " மஞ்சள் நிற அணியினர் களத்தில் இறங்கும் நேரம் வந்துவிட்டது என உங்களுக்கு தெரியும், கர்ஜிக்க உள்ள சிங்கங்களுக்கு தமது மண்ணிலிருந்து விசில் அடிப்போம்" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கேப்டன் தோனி மற்றும் சிஎஸ்கே அணிக்கு குட் லக் என்றும் பதிவிட்டுள்ளார் ஸ்டாலின். மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும், ஸ்டாலினின் தந்தையுமான மு கருணாநிதியும் ஒரு கிரிக்கெட் பிரியர், மேலும் தோனியின் ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.
அட கடவுளே.. ரோஹித்துக்கு இப்படி ஒரு ராசியா.. வரிசையா அடிமேல அடி வாங்கியிருக்காங்களே!