தேர்தல் விதிமீறல்.. திமுக நம்பர் 1, அடுத்த இடத்தில் அதிமுக.. சத்யபிரதா சாஹு தகவல்
சென்னை: தேர்தல் விதிகளை மீறியதாக 4690 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று நிருபர்களிடம் அவர் அளித்த பேட்டி:
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தற்போதுவரை தமிழ்நாட்டில் பதியப்பட்ட மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 4,690. இதில் திமுக மீது 1,695 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
ஆளும் கட்சியான அதிமுக மீது 1,453 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. தேர்தல் பறக்கும் படையால் தமிழகத்தில் இதுவரை ரூ.213.18 கோடி , 2403 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்..மே 1 முதல் - 8 வரை தீவிர பிரச்சாரத்தில் இறங்கும் ஸ்டாலின்
வாக்கு எண்ணிக்கை நடைபெறும், மே23 வரை தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருக்கும். முன்னதாக மே 19ம் தேதி, 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.