அனைத்து வகை விவசாய கடன்களும் தள்ளுபடி.. திமுக தேர்தல் வாக்குறுதியில் அசத்தல் திருத்தம்
Recommended Video
சென்னை: அனைத்து விவசாய கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையை திருத்தி இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
லோக்சபா தேர்தலையொட்டி, திமுக நேற்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில், சிறு, குறு விவசாயிகளின் அனைத்து வகை பயிர்க் கடன்களும் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அய்யா காசு கொடுங்க.. பிரச்சாரம் பண்ணனும்.. தொழிலதிபர்களை மொய்க்கும் வேட்பாளர்கள்!
5 ஏக்கருக்கும், கீழே நிலம் வைத்திருப்பவர்களே, சிறு, குறு விவசாயிகள் பட்டியலில் வருவார்கள். எனவே அவர்கள் மட்டுமே பலன் பெறுவார்கள். ஆனால் அனைத்து விவசாயிகளுக்குமான கடன்களும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு முன்வைக்கப்பட்டது.
குறிப்பாக கூட்டணி கட்சிகளால் இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதையடுத்து, அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று தனது தேர்தல் அறிக்கையை இன்று திருத்தி வெளியிட்டுள்ளது திமுக.
[இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்]
இதேபோல்தான், 2007ம் ஆண்டு ரூ.70 ஆயிரம் கோடி பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போதுள்ள சூழ்நிலையில், நாடு முழுக்க தேசிய வங்கிகளில், ரூ.80 ஆயிரம் கோடி பயிர்க்கடன்கள் நிலுவையில் உள்ளன. அவை தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்க அம்சமாக பார்க்கப்படுகிறது.