கந்தசஷ்டி கவசத்தை இழிவுபடுத்தும் கறுப்பர் கூட்டம்: பழனி திமுக எம்.எல்.ஏ. ஐபி செந்தில்குமார் கண்டனம்
சென்னை: கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தும் வகையில் கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலில் பதிவிட்டதற்கு பழனி தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஐ.பி. செந்தில்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஐ.பி. செந்தில்குமார் இன்று வெளியிட்ட அறிக்கை:
ஒன்றேகுலம்_ஒருவனேதேவன் என்ற கொள்கையை தன் உயிர்மூச்சாக கொண்ட அண்ணா, கருணாநிதி வழியில் ஸ்டாலின் மக்கள் பணியானது நாடறிந்ததே. பண்பாடு, கலாச்சாரம் என்பது வேறு, மூடநம்பிக்கையை எதிர்ப்பது வேறு,..
வரலாற்றுச்சிறப்புமிக்க திருவாரூர் தேரை ஓட வைத்த தலைவர் எங்கள் தலைவர் கருணாநிதி என்பது உலகமே அறிந்த விடயம்.. சில தினங்களுக்கு முன்பு திருமுருக நம்பிக்கையுடையோரை புண்படுத்தும் படியும், தமிழ் கடவுள் முருகனை இழிவு படுத்தியும் கறுப்பர் கூட்டம் என்ற அமைப்பில் அங்கம் பெற்ற ஒருவர் தமிழ்க்கடவுள் முருகனின் கந்தசஷ்டி கவசத்தை இழிவுபடுத்தும் விதமாக பதிவிட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
கந்த சஷ்டி கவசம் அவதூறு...மேலும் ஒருவர் புதுச்சேரி போலீசில் சரண்!!
இத்தனை நாட்களாக இல்லாமல் தேர்தல் நெருங்கும் சூழலில் இந்த இழிச்செயல் யாரால் தூண்டி விடப்பட்டிருக்கும் என்பது விரைவில் மக்களுக்கு தெரிய வரும்.. திமுக என்றுமே எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல..
பழனி சட்டமன்ற உறுப்பினர் என்ற பொறுப்பணர்வோடு இச்செயலை வண்மையாக கண்டிக்கிறேன்.. இவ்வாறு ஐ.பி. செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.