சபாநாயகர் அறையில்.. ஸ்டாலின் முன்னிலையில்.. திமுக எம்எல்ஏக்கள் நாளை பதவியேற்பு!
சென்னை: சட்டசபையில் சபாநாயகர் அறையில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக எம்எல்ஏக்கள் நாளை பதவியேற்கின்றனர்.
தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதி தேர்தலும் 22 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் கடந்த 23 ஆம் தேதி வெளியானது.
இதில் இரு தேர்தல்களிலுமே திமுக கூடுதல் இடங்களை கைப்பற்றியது. 22 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக 13 இடங்களை கைப்பற்றியது.
இந்நிலையில் 13 தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏக்கள் நாளை பதவியேற்கவுள்ளனர். நாளை சட்டசபையில் சபாநாயகர் அறையில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியின் புதிய எம்எல்ஏக்கள் பதவி ஏற்கவுள்ளனர்.
Comments
English summary
DMK MLAs takes oath tomorrow in Tamilnadu Assembly.
Story first published: Monday, May 27, 2019, 8:32 [IST]