டீ கொண்டு வந்து கொடுத்த எம்.பி...! திமுக முப்பெரும் விழாவில் ருசிகர நிகழ்வு
Recommended Video
திருவண்ணாமலை தொகுதி மக்களவை உறுப்பினர் அண்ணாதுரை திமுக முப்பெரும் விழாவில் கலந்துகொண்ட முக்கிய நிர்வாகிகளுக்கு தானே டீ கொண்டு வந்து கொடுத்ததோடு, அவர்களுக்கு தேவையான பணிவிடையும் செய்தார்.
வேலு ஆதரவாளர்
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராக இருப்பவர் அண்ணாதுரை எம்.பி. இவர் எ.வ.வேலுவின் தீவிர ஆதரவாளர். வேலு மீது அதீத நம்பிக்கையும், மரியாதையும் அண்ணாதுரை வைத்ததன் விளைவு, அவரை தனது நெருங்கிய வட்டத்திற்குள் வைத்துள்ளார் எ.வ.வேலு.கடந்த 2014 தேர்தலில் திருவண்ணாமலையில் போட்டியிட்டு அதிமுகவின் வனரோஜாவிடம் வெற்றிவாய்ப்பை பறிகொடுத்த அண்ணாதுரையை, மீண்டும் 2019-ல் களமிறக்கி வெற்றிபெறச் செய்தார் எ.வ.வேலு.
அமித் ஷா அப்படி சொல்கிறார்.. ராணுவம் இப்படி பாடுகிறது.. இதுதான் இந்தியா!
டீ கொடுத்த எம்.பி.
வழக்கமாக திமுக நிகழ்ச்சிகளில், பிரபல ஹோட்டல் ஒன்றில் டீ, காஃபி உள்ளிட்ட ஸ்நாக்ஸ்கள் ஆர்டர் கொடுக்கப்பட்டு பெறப்படும். ஹோட்டல் ஊழியர்களே அதனை பரிமாறுவர். ஆனால் நேற்று சற்று வித்தியாசமான காட்சி கண்ணில் பட்டது. விழா மேடையில் அமர்ந்திருந்த டி.ஆர்.பாலு, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஐ.பெரியசாமி உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு அண்ணாதுரை எம்.பி.யே டீ கொண்டு வந்து கொடுத்தார்.
டி.ஆர்.பாலு விளக்கம்
இதில் விநோதம் என்னவென்றால் சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு அண்ணாதுரையை யாரென்று தெரியவில்லை. உடனடியாக அருகில் அமர்ந்திருந்த டி.ஆர்.பாலு, இவர் இந்த தொகுதி எம்.பி.ம்மா என அறிமுகம் செய்து வைத்தார். ஓ..அப்படியா என வியந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் இவர் ஏன் டீ எடுத்துட்டு வருகிறார்..எனக் கேட்க அவர் எளிமையான ஆளு என டி.ஆர்.பாலு விளக்க என இப்படி ருசிகர நிகழ்வு நடைபெற்றது.