#MeToo முகத்திரைகளை கிழிக்கும் பெண்களை ஊக்கப்படுத்த வேண்டும்... கனிமொழி எம்.பி
மீடூ மூலம் முகத்திரைகளை கிழிக்கும் பெண்களை ஊக்கப்படுத்த வேண்டும் என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை: மீடூ மூலம் முகத்திரைகளை கிழிக்கும் பெண்களை ஊக்கப்படுத்த வேண்டும் என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
பாலியல் தொல்லைக்கு ஆளாகும் பெண்கள், சமூகவலைதளங்களில், மீடூ இயக்கத்தின் மூலம் தங்களுக்கு ஏற்பட்ட நிலையைக் கூறிவருகின்றனர். திரையுல பிரபலங்கள் தொடங்கி பல்வேறு துறையிலும் நடந்த பாலியல் ரீதியான பாதிப்புகளை பெண்கள் வெளியிட்டு வருகின்றனர்.
இதில் அரசியல்வாதிகள், திரைத்துறையினர், விளையாட்டுத்துறையை சேர்ந்தவர்கள் என பலரும் சிக்கி வருகின்றனர். இதுகுறித்து விசாரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் மீடூ பிரச்சாரத்திற்கு ஆதரவாக திமுக எம்பி கனிமொழி டிவிட்டியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது,
The #metoo campaign should start a debate & make people introspect. Truth should be told to the world. This is a step towards stopping sexual exploitation. Let’s encourage the women to expose the faces behind the mask. Let the perpetrators be put on trial & not the victims.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) October 12, 2018
மீடு பிரச்சாரம் தொடர்பாக விவாதம் நடத்தப்பட வேண்டும். உண்மை உலகிற்கு தெரிவிக்கப்பட வேண்டும். இது பாலியல் தொல்லைகளை நிறுத்துவதற்கு ஒரு படி.
முகமூடி பின்னால் உள்ள முகங்களை அம்பலப்படுத்தும் பெண்களை ஊக்குவிக்க வேண்டும். குற்றவாளிகள் சோதனையிலும் பாதிக்கப்பட்டவர்களிலும் வைக்கப்படட்டும்.
குற்றவாளிகளிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களிடம் அல்ல. இவ்வாறு கனிமொழி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.