தயாளுஅம்மாளிடம் ஆசி.. மெரினாவில் பேரணி.. நினைவிடங்களில் மரியாதை.. படு ஸ்பீடில் ஸ்டாலின்!
சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் புதிய எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி, அண்ணா நினைவிடங்களில் பேரணியாக சென்று அஞ்சலி செலுத்தினார்.
தமிழகத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 22 தொகுதிகளுக்கான சட்டசபை இடைத்தேர்தல்களில் திமுகவே அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் திமுகவின் புதிய எம்பிக்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெறுகிறது.
இதற்காக புதிய எம்பிக்கள், எம்எல்ஏக்கள் சென்னையில் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் புதிய எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் திமுக தலைவர் ஸ்டாலின் கருணாநிதி மற்றும் அண்ணா நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினார்.
சுமலதாவுக்காக உள்ளடி வேலை பார்த்த காங்கிரஸ் தலைவர்கள்.. குமாரசாமி மகன் தோற்றது இப்படித்தான்
நினைவிடத்தில் மரியாதை
முன்னதாக புதிய எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் சென்னை மெரினாவில் உள்ள உழைப்பாளர் சிலையில் இருந்து அண்ணா நினைவிடம் வரை ஸ்டாலின் பேரணியாக சென்றார். பின்னர் முன்னாள் முதல்வர் கருணாநிதி, அண்ணா ஆகியோரின் நினைவிடங்களில் ஸ்டாலின் தலைமையில் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
பெரியார் நினைவிடத்திலும்
கனிமொழி, டிஆர் பாலு, தயாநிதிமாறன், திருச்சி சிவா, ஆ ராசா உள்ளிட்டோர் கருணாநிதி, அண்ணா ஆகியோரின் நினைவிடங்களில் மரியாதை செய்தனர். இதைத்தொடர்ந்து
பெரியார் நினைவிடத்திலும் ஸ்டாலின், கனிமொழி, டிஆர் பாலு, ஆ.ராசா, கி.வீரமணி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
தாயாரிடம் ஆசி
பெரியார் நினைவிடத்தில் வீரமுழக்கமிட்டு திமுகவினர் மலர்வளையம் வைத்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.முன்னதாக நாடாளுமன்ற தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெற்றதை தொடர்ந்து ஸ்டாலின் தனது தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார்.
ஸ்பீடில் ஸ்டாலின்
இதேபோல் திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க அன்பழகனிடமும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆசிபெற்றார். மக்களவைத் தேர்தலில் திமுக தமிழகத்தில் போட்டியிட்ட 38 தொகுதிகளில் 37 தொகுதிகளை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து ஸ்டாலினின் செயல்பாடுகள் வேகமெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.