இஸ்கானிடம் காலை உணவுத் திட்டம்- உணவு பாசிசம்.. சாடும் திமுக வக்கீல் சரவணன்
சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் வெங்காயம், பூண்டு சேர்க்காமல் காலை உணவு வழங்கப்படுவது உணவு பாசிச திணிப்பு என திமுகவின் வழக்கறிஞர் சரவணன் சாடியுள்ளார்.
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் இஸ்கான் அமைப்பின் துணையுடன் காலை உணவு வழங்கப்படுகிறது. இது கடும் சர்ச்சையாகி உள்ளது.
இந்த உணவுத் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான வைகோ சாடியுள்ளார். திமுக தலைமை இதுவரை இத்திட்டம் குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு திமுகவின் வழக்கறிஞர் சரவணன் அளித்த பேட்டியில், உணவில் வெங்காயம், பூண்டு இல்லாமல் சேர்த்து சாப்பிடுவது என்பது மாணவர்களுக்கு ஏற்றது அல்ல. இது உணவு பாசிசம் என்றுதான் அழைக்க வேண்டும் என சாடியுள்ளார்.
Comments
English summary
DMK lawyer Saravanan has opposed the Akshaya Patra Foundation's breakfast to Chennai Coporation schools.
Story first published: Wednesday, February 19, 2020, 16:39 [IST]