திமுக ராஜ்யசபா எம்பி ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா உறுதி - தனியார் மருத்துவமனையில் சிகிச்சை
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து, சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: திமுக அமைப்புச் செயலாளரும் ராஜ்யசபா உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரையும் விதிமுறைகளை பின்பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 56 லட்சம் பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 45 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். தமிழகத்தில் 6 லட்சம் பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.
எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் எம்பிக்கள், மருத்துவர்கள், முன்களப்பணியாளர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று குணமடைந்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர் வளர்மதி, அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், தங்கமணி, செல்லூர் ராஜூ, நிலோபர் கபில் என அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் என பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு பின்னர் குணமடைந்தனர்.
8 மரபணுவில் 39 உருமாற்றம்...மும்பை மருத்துவர்களுக்கு மீண்டும் கடுமையான கொரோனா தொற்று!!
திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் கொரோனா நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த நிலையில் அவருக்கு தொற்று ஏற்பட்டது. பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் அவர் மரணமடைந்தார். இந்த நிலையில் திமுக அமைப்புச் செயலாளரும் ராஜ்யசபா உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கொரோனா அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரையும் விதிமுறைகளை பின்பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.