திமுகவில் பூகம்பம்.. ஸ்டாலின் மனக்குழப்பத்தில் உள்ளார்.. அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி பேட்டி!
திமுகவில் பூகம்பம் வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் மனக்குழப்பத்தில் உள்ளார், என்று அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தற்போது பேட்டி அளித்துள்ளார்.
சென்னை: திமுகவில் பூகம்பம் வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் மனக்குழப்பத்தில் உள்ளார், என்று அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தற்போது பேட்டி அளித்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் மிசாவில் கைதானது தொடர்பான செய்தி தொடர்ந்து வைரலாகி வருகிறது. இந்தியாவில் மிசா சட்டம் அமலில் இருந்த காலத்தில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி உத்தரவின் பெயரில் பலர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக தமிழக அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தற்போது பேட்டி அளித்துள்ளார்.
அதில், மிசாவின் போதுதான் ஸ்டாலின் கைதானார். ஆனால் அவர் ஏன் கைதானார் என்று தெரியவில்லை. அவரை மிசா சட்டத்தின் கீழ் யாரும் கைது செய்யவில்லை.
முதல்நாள் பொதுக்குழு.. மறுநாளே மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. அதிரடியாக களமிறங்கும் திமுக!
இரண்டு ஆணையம்
மொத்தம் இரண்டு விசாரணை ஆணையம் மிசா கைதிகள் பெயரை கொண்டு இருக்கிறது. ஆனால் இரண்டிலும் ஸ்டாலின் பெயர் இல்லை. இதன் மூலம் அவர் மிசாவிற்காக கைதாகவில்லை என்பது தெரிகிறது. அதனால் அந்த நேரத்தில் அவர் எதற்காக கைதானார் என்று அவர்தான் கூற வேண்டும்.
உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலினை முன்னிறுத்திதான் வேலூரில் வென்றோம் என்று திமுக சொன்னது. அப்படியென்றால் எதனால் அவர்கள் 2 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தனர். இதற்கும் உதயநிதிதான் காரணம் என்று அவர்கள் சொல்வார்களா?
திமுக பூகம்பம்
திமுகவில் பூகம்பம் வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் மனக்குழப்பத்தில் உள்ளார். அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. உதயநிதி ஸ்டாலின் மூலம் அவரின் கட்சிக்குள் பிரச்சனை வரப்போகிறது.
உள்ளாட்சி தேர்தல்
நெஞ்சை நிமிர்த்தி நேர்கொண்ட பார்வையாக உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தயார். அதிமுக கட்சியில் எல்லோரும் உற்சாகமாக இருக்கிறார்கள். உள்ளாட்சி தேர்தலிலும் நாங்கள்தான் வெற்றிபெறுவோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.