சர வெடி.. இனிப்பு.. ரிசல்ட் வரும்முன்பே அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்
சென்னை: திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இப்போதே வெற்றி கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன.
வேலூர் லோக்சபா தொகுதியில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. எனவே, திமுக பகுதி செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்த நிர்வாகிகள் இன்று காலை முதல் திமுக தலைமையகமான அறிவாலயத்தில் குவிந்திருந்தனர்.
இன்று மதியம் சுமார் 2 மணி அளவில் 15 ஆயிரம் வாக்குகள் மட்டுமே எண்ணப்பட இருந்த நிலையில் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வேலூர் தொகுதியில் முன்னிலை வகித்தார்.
இதையடுத்து, எப்படியும் வெற்றி பெற்று விடுவோம் என்ற எண்ணத்தில், 1000 வாலா சரவெடி வெடித்து, திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இனிப்புகளை கொடுத்தும் அவர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வெற்றிக்கொண்டாட்டம்
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றதையடுத்து சென்னை
உயர்நீதிமன்ற வளாகம் முன்பு திமுக சட்டத் துறை சார்பாக மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ரகு அவர்கள் தலைமையில் சுமார் 50க்கு மேற்பட்ட வழக்கறிஞர்கள் வெற்றி பெற்றதையடுத்து பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்